நற்றிணை - 331. நெய்தல்
உவர் விளை உப்பின் உழாஅ உழவர் ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி, கானல் இட்ட காவற் குப்பை, புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி, மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி, |
5 |
'எந்தை திமில், இது, நுந்தை திமில்' என வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர் திண் திமில் எண்ணும் தண் கடற் சேர்ப்ப! இனிதேதெய்ய, எம் முனிவு இல் நல் ஊர்; இனி, வரின் தவறும் இல்லை: எனையதூஉம் |
10 |
பிறர் பிறர் அறிதல் யாவது- தமர் தமர் அறியாச் சேரியும் உடைத்தே. |
ஆங்குப் புலவு நாற்றத்தையுடைய மீனை உப்புப் படுத்துப் புலர்த்தும்பொழுது அவற்றைக் கொண்டுபோகவந்து விழுங் காக்கை முதலாய புள்ளினங்களை யோப்பி; மடப்பம் பொருந்திய நோக்கத்தையுடைய தோழியர் உடனே; உழாது விளைவிக்கும் நெய்தனில மாக்களாகிய பரதவர் உவர் நிலத்து விளைகின்ற உப்பினை; செறிவுடைய உப்பு வாணிகர் வருகின்ற காலம் நோக்கி¢க் கழிக்கரைச் சோலையருகிலே குவடாகக் குவித்த காவலையுடைய குவியலாகிய; அவ்வுப்புக் குவட்டில் பரதவர் மகளிர் ஏறி நின்று; இங்கு வருகின்றது எந்தையின் மீன் படகாகும் அங்கு வருகின்றது நின் தந்தையினது மீன் படகாகும் என்று; வளைந்த கடனீரில் வேட்டைமேற் சென்ற சுற்றத்தாருடைய வலிய மீன் படகுகளை எண்ணுகின்ற தண்ணிய கடற் சேர்ப்பனே!; வெறுத்தலைக் கருதாத எம்முடைய நல்லவூர் மிக இனிமையுடையதாய் இரா நின்றது; இப்பொழுது முதலாக என்று வந்தாலும் யாதோர் ஊறுபாடும் இல்லை; சுற்றத்தார் ஒருவரையொருவர் அறியாத சேரியை உடையதாதலால்; எவ்வளவேனும் அயலார் ஒருவரையொருவர் அறிவது எவ்வண்ணமியலும்?; ஆதலின் நீ அச்சமின்றி வருவாயாக!
தோழி இரவுக்குறி நேர்ந்தது. - உலோச்சனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 331. நெய்தல், இலக்கியங்கள், மீன், நெய்தல், திமில், நற்றிணை, பரதவர், தமர், வருகின்றது, ஒருவரையொருவர், படகாகும், பிறர், இல்லை, உவர், புலவு, எட்டுத்தொகை, கடற், சங்க