நற்றிணை - 306. குறிஞ்சி
தந்தை வித்திய மென் தினை பைபயச் சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ- 'குளிர் படு கையள் கொடிச்சி செல்க' என, நல்ல இனிய கூறி, மெல்லக் கொயல் தொடங்கினரே கானவர்; கொடுங் குரல் |
5 |
சூற் பொறை இறுத்த கோல் தலை இருவி விழவு ஒழி வியன் களம் கடுப்பத் தெறுவர, பைதல் ஒரு நிலை காண வைகல் யாங்கு வருவதுகொல்லோ- தீம் சொல் செறி தோட்டு எல் வளைக் குறுமகள் |
10 |
சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே? |
'கிளிகடி கருவி பொருந்திய கையையுடைய கொடிச்சியே! நீ மனையகம் புகுவாயாக!' என்று நல்ல இனிய மொழிகளை மொழிந்து; கானவர் மெல்லத் தினைக் கதிரைக் கொய்யத் தொடங்கினர்; ஆதலின் எம் தந்தை விதைத்த மெல்லிய தினையைக் கொய்துகொண்டு போமாறு மெல்ல மெல்ல வருகின்ற சிறிய கிளிகளை வெருட்டுதல் இனி எப்படியாகும்?; அங்ஙனம் வளைந்த கதிர்களாகிய குலவிய பொறையைக் கொய்தொழித்த கொம்பாகிய தலையுடைய தினைத்தாள்கள்தாம் திருவிழாச் செய்தொழிந்த அகன்ற அவ் விழாக்களம் போலப் பொலிவழிந்து எம்மை வருத்தாநிற்கையில் இவ் வண்ணம் கொல்லை அழிந்த தன்மையையும்; இனிய சொல்லும் நெருங்கிய தொகுதியான ஒளி பொருந்திய வளையுமுடைய இளமையுற்ற எங்கள் தலைமகள்; முன்பு சிறிய தினைப் புனத்துப் பெரிய மேற்கூரை உடைய கட்டுப் பரணிலே நின்ற நிலைமையையும்; பார்க்கும் பொருட்டுக் காலையிலே தலைமகன் எப்படி வருதல் இயையுமோ? இயையாதே!
புனம் மடிவு உரைத்துச் செறிப்பு அறிவுறீஇயது; சிறைப்புறமும் ஆம். - உரோடோகத்துக் கந்தரத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 306. குறிஞ்சி, இலக்கியங்கள், இனிய, நற்றிணை, குறிஞ்சி, கானவர், மெல்ல, சிறிய, பொருந்திய, சிறு, எட்டுத்தொகை, சங்க, தந்தை, நல்ல