நற்றிணை - 30. மருதம்
கண்டனென்- மகிழ்ந!- கண்டு எவன்செய்கோ?- பாணன் கையது பண்புடைச் சீறியாழ் யாணர் வண்டின் இம்மென இமிரும், ஏர்தரு தெருவின், எதிர்ச்சி நோக்கி, நின் மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர் |
5 |
கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி- கால் ஏமுற்ற பைதரு காலை, கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி, உடன் வீழ்பு, பலர் கொள் பலகை போல- வாங்கவாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே. |
10 |
மகிழ்ந ! பாணன் கையிடத்ததாகிய பண்பமைந்த சிறிய யாழ் அழகிய வண்டுபோல இம்மென ஒலியாநின்ற நீ எழுந்து வருகின்ற தெருவிலே; நீ வருதலை எதிர்பார்த்து நின்மார்பை முன்பு தமக்குடையராய்ப் பற்றிக்கொண்டிருந்த மாட்சிமைப் பட்ட இழையை யணிந்த பரத்தையர் பலரும்: கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப்பனி நீ பிரிந்ததனாலுண்டாகிய கவற்சி மிகுதலாலே கண்களினின்று வெப்பமாய் வடிகின்ற கண்ணீருடனே; கடிய புயற்காற்று வீசிச் சுழற்றுதலாலே துன்புற்ற காலத்துக் கடலிலே தாம் ஏறியிருக்கும் மரக்கலங் கவிழ்ந்து விட்டதாக, அங்ஙனம் கவிழ்தலும்; கலக்கமுற்றுத் தாமும் ஒருசேர வீழ்ந்து அவ்வழி விழுந்த பலரும் ஆண்டு மிதந்து வந்த ஒரு பலகையைப் பற்றிக்கொண்டு தாம் தாம் தனித்தனி இழுப்பதுபோல; நின் கைகளைப் பற்றி அவரவர் தம் தம் கருத்து முற்றுமாறு இழுத்தலாலே நீ அவரிடைப்பட்டு மிக வருந்துகின்ற நிலைமையை; யான் கண்கூடாகக் கண்டேன், கண்டும் நின்னை யாது செய்யற்பாலேன் காண்? ஆதலின் நீ யாரையும் அறியேனென்றதெவ்வண்ணங் கொல்?
பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன், 'யாரையும் அறியேன்' என்றாற்குத் தோழி சொல்லியது. - கொற்றனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 30. மருதம், இலக்கியங்கள், நற்றிணை, மருதம், ஏமுற்ற, தாம், வெய்து, யாரையும், வீழ், பலரும், வந்த, நின், சங்க, எட்டுத்தொகை, மகிழ்ந, பாணன், இம்மென, கவல்