நற்றிணை - 295. நெய்தல்
முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின், புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இருங் கூந்தல் ஆயமும் அழுங்கின்று; யாயும் அஃது அறிந்தனள், அருங் கடி அயர்ந்தனள், காப்பே; எந்தை, வேறு பல் நாட்டுக் கால் தர வந்த, |
5 |
பல வினை நாவாய் தோன்றும் பெருந் துறை, கலி மடைக் கள்ளின் சாடி அன்ன, எம் இள நலம் இற்கடை ஒழியச் சேறும்; வாழியோ! முதிர்கம் யாமே. |
தலைசரிந்த மலைப்பக்கத்தில் முதலொடு கருகிய வள்ளிக் கொடிபோல; மேலின் அழகெல்லாம் அழிந்து தழைந்த தாழ்ந்த கரிய கூந்தலையுடைய தோழியர் குழாமும் வருந்தி அழுங்கா நின்றது; அக் களவொழுக்கத்தை அன்னையும் அறிந்தனளாகி இல்வயிற் செறித்து அரிய காவல் செய்வாளாயினள்!; ஆதலின் வேறாகிய பலபல தேயங்களினின்றுங் காற்றுச் செலுத்துதலால் வந்த எந்தையினுடைய பலவாய தொழிலின் பொலிவு பெற்ற கலங்கள் ஓங்கித் தோன்றும் பெரிய துறையின் கண்ணே; வைத்துடைய உண்ணுதலால் செருக்குமிகுகின்ற கள்ளின் சாடி போன்ற எம்முடைய இளமையும் அழகும்; இல்லின் கண்ணே வைகிக் கெடும்படியாக; யாங்கள் எம் மனையகத்துச் செல்லாநிற்பேம்; அம் மனைவயினிருந்தே முதிர்ந்து முடிவேம்; இன்ன தீங்கினை உறுவித்த நீ நெடுங்காலம் வாழ்வாயாக!
தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது; சிறைப்புறமும் ஆம். - அவ்வையார் >
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 295. நெய்தல், இலக்கியங்கள், நெய்தல், நற்றிணை, கள்ளின், சாடி, கண்ணே, தோன்றும், அழிந்து, எட்டுத்தொகை, சங்க, வந்த