நற்றிணை - 290. மருதம்
வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக் கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில் ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன் தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல் கொள்ளல்மாதோ, முள் எயிற்றோயே! |
5 |
நீயே பெரு நலத்தையே; அவனே, 'நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி, தண் கமழ் புது மலர் ஊதும் வண்டு' என மொழிப; 'மகன்' என்னாரே. |
முட்போன்ற கூரிய பற்களையுடையோய்!; வயலில் மள்ளர் அறுக்கும் கதிரோடு அறுபட்டு அரிச் சூட்டொடு களத்திற் கொணர்ந்து போடப்பட்ட வெளிய ஆம்பலின் அப்பொமுது மலர்ந்த புதிய பூ, கன்றை அணிமையில் ஈன்றுடைய பசுவானது தின்று எஞ்சிய மிச்சிலை; உழுது விட்ட ஓய்ந்த நடையையுடைய பகடு தின்னா நிற்கும் ஊரனுடன்; கூட்டம் நெடுங்காலம் நிகழ்த்துதலை நீ விரும்பினையாதலின் 'அவள் அவனோடு கட்டில் வரை யெய்தினாள்' என்று ஊரார் கூறுகின்ற சொல்லைக்கொண்டு என்னைப்போல வேறுபட்டுக் கொள்ளாதே. இனி என் வார்த்தையைக் கேட்டல் நினக்கு விருப்பமோ?; விருப்பமாயின் யான் கூறுகின்றதனைக் கொள்வாயாக!; அதுதான் யாதோவெனில் பெரிய இளைமையும் தகுதிப்பாடும் உடையையாதலால் நீ வேறுபட்டுக் கொள்வது நின் இளமைக்கும் எழிலுக்கும் ஏலாதது காண்; அவனை நெடிய நீரையுடைய பொய்கையில் நடுயாமத்திலே தண்ணிதாய் நறுமணங் கமழும் புதிய மலரிலே சென்று தேனுண்ணும் வண்டு எனச் சொல்லுவனரல்லாமல்; நல்ல ஆண்மகன் என யாருங்கூறார்; ஆதலின் அவனைப் புலவாதே கொள்!;
பரத்தை விறலிமேல் வைத்துத் தலைமகளை நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற்பிரிய, வாயிலாய்ப் புக்க பாணன் கேட்ப, தோழி சொல்லியதூஉம் ஆம். - மதுரை மருதன் இளநாகனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 290. மருதம், இலக்கியங்கள், நற்றிணை, மருதம், வேறுபட்டுக், வண்டு, சங்க, எட்டுத்தொகை, பகடு