நற்றிணை - 28. பாலை
என் கைக் கொண்டு தன் கண்ஒற்றியும், தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும். அன்னை போல இனிய கூறியும், கள்வர் போலக் கொடியன்மாதோ- மணி என இழிதரும் அருவி, பொன் என |
5 |
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து, ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில் ஓடு மழை கிழிக்கும் சென்னி, கோடு உயர் பிறங்கல், மலைகிழவோனே! |
நீலமணிபோலத் தௌ¤ந்து இழியும் அருவியையுடைய, பொன்போல வேங்கை மலர் உதிர்ந்த உயர்ந்த மலைப் பக்கத்தில்; அசைகின்ற தண்டுயர்ந்த பசிய கணுக்களையுடைய மூங்கில்; விசும்பின்கண் ஓடுகின்ற முகிலைக் கீழும் உச்சியையுடைய கொடுமுடிகள் உயர்ந்த பிறங்குதலாகிய மலைக்கு உரிமையுடைய நம் தலைவன்; முன்பு தலைப்பெய்த நாளிலே என் கைகளைத் தானெடுத்துத் தன் கண்களில் ஒற்றியும் தன் கைகளால் எனது நல்ல நெற்றியைத் தைவந்தும், அன்னைபோல இனிய பலவற்றைக் கூறியும் தலையளி செய்து இஞ்ஞான்று; கள்வரைப் போலக் கொடியனாயிரா நின்றான்; அவன் இயல்பு கொடியதாவது காண்;
பிரிவின்கண்ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது; குறை நயப்பும் ஆம். - முதுகூற்றனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 28. பாலை, இலக்கியங்கள், நற்றிணை, பாலை, போலக், வேங்கை, மூங்கில், உயர்ந்த, கூறியும், கொண்டு, எட்டுத்தொகை, சங்க, கைக், இனிய