நற்றிணை - 264. பாலை
பாம்பு அளைச் செறிய முழங்கி, வலன் ஏர்பு, வான் தளி பொழிந்த காண்பு இன் காலை, அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும் மணி புரை எருத்தின் மஞ்ஞை போல, நின் வீ பெய் கூந்தல் வீசு வளி உளர |
5 |
ஏகுதி- மடந்தை!- எல்லின்று பொழுதே: வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த ஆ பூண் தெண் மணி இயம்பும், ஈகாண் தோன்றும், எம் சிறு நல் ஊரே. |
மடந்தாய்! ஞாயிறு மேலைத்திசையிலே சென்று ஒளி மழுங்கியது: வேய்பயில் இறும்பின் ஆ பூண் கோவலர் யாத்த தௌ¢மணி இயம்பும் மூங்கில் நிறைந்த சிறிய மலையின் கண்ணே பசுவினிரை பூண்ட கோவலராலே கட்டப்பட்ட தௌ¤ந்த ஓசையையுடைய மணி ஒலியா நிற்கும்; எமது சிறிய நல்லவூர் தோன்றாநின்றது, உவ்விடத்தே பாராய்!: பாம்பு அளைச் செறிய முழங்கி வலன் ஏர்பு வான் தளி பொழிந்த காண்பின் காலை பாம்பு அளையினுள்ளே செறிந்திருக்குமாறு முழங்கி வலமாக எழுந்து மேகம் மழை பொழிந்த காட்சியையுடைய காலைப் பொழுதிலே; அழகு விளங்கிய கலாபத்தை வியப்புடையதாக விரித்து ஆடுகின்ற நீலமணி போன்ற பிடரியை உடைய மயில்போல; மலர் சூடிய நின் கூந்தல் வீசுகின்ற காற்று உளரி விரித்துவிடச் சிறிது விரைந்து செல்வாயாக!
உடன் போகாநின்ற தலைமகன், தலைமகளை வற்புறீஇயது; உடன்போய் மறுத்தரா நின்றான் ஊர்காட்டி, வற்புறீஇயதும் ஆம். - ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 264. பாலை, இலக்கியங்கள், பாம்பு, நற்றிணை, பொழிந்த, முழங்கி, பாலை, கோவலர், நின், கூந்தல், பூண், சிறிய, இயம்பும், விரித்து, யாத்த, ஏர்பு, சங்க, எட்டுத்தொகை, அளைச், செறிய, வான், வலன், காலை