நற்றிணை - 243. பாலை
தேம் படு சிலம்பில் தௌ அறல் தழீஇய துறுகல் அயல தூ மணல் அடைகரை, அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்துப் பொதும்புதோறு அல்கும் பூங் கண் இருங் குயில், 'கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு |
5 |
அகறல் ஓம்புமின், அறிவுடையீர்!' என, கையறத் துறப்போர்க் கழறுவ போல, மெய் உற இருந்து மேவர நுவல, இன்னாது ஆகிய காலை, பொருள்வயிற் பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின், |
10 |
அரிது மன்றம்ம, அறத்தினும் பொருளே? |
தேன் உண்டாகின்ற பக்கமலையிலே தௌ¤ந்த நீர் சூழ்ந்த துறுகல்லின் அயலிலுள்ள தூய மணல் அடுத்த கரையின் கண்ணே; அசைகின்ற கிளைகளிலே தளிர்த்துத் தழைத்த நறிய வடுக்களையுடைய மாமரமிக்க சோலைதோறும் தங்குதல்கொண்ட; சிவந்த கண்ணுடைய கரிய குயில்கள் சூதாடு கருவி பெயர்ந்து விழுமாறு போன்ற நிலையில்லாத பொருளீட்டும் வாழ்க்கையை ஏதுவாகக் கொண்டு; "அறிவுடையீர் நீங்கள் நுங்களுடைய காதலிமாரை விட்டுப்பிரியாது கலந்தேயிருங்கோள்!"; என்று செயலறும்படி கைவிட்டுத் துறந்து செல்வோரை இடித்துரைப்பனபோலத் தாம் தாம் ஆணும் பெண்ணும் மெய்யொடு மெய் சேரவிருந்து பொருந்துதல் வரக் கூவாநிற்ப; பிரியும் பொழுதே இன்னாமையைத் தருவதாகிய இளவேனிற் காலத்துப் பொருள்வயிற் பிரிவது ஆடவர்க்கு இயல்பாகு மென்னில்; அடைந்தோம் என்பாரைக் கைவிடேம் என்று கூறிப் பாதுகாக்கும் அறத்தினுங் காட்டில் தௌ¤வாகப் பொருள் அரியது போலும்? இது மிக்க வியப்பு;
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது. - காமக்கணிப் பசலையார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 243. பாலை, இலக்கியங்கள், பாலை, நற்றிணை, பொருள்வயிற், ஆடவர்க்கு, தாம், மெய், மணல், எட்டுத்தொகை, சங்க, அறிவுடையீர்