நற்றிணை - 23. குறிஞ்சி
தொடி பழி மறைத்தலின், தோள்உய்ந்தனவே; வடிக் கொள் கூழை, ஆயமோடு ஆடலின், இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே; கடிக் கொள அன்னை காக்கும் தொல் நலம் சிதைய, காண்தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர் |
5 |
முத்துப் படு பரப்பின் கொற்கை முன்துறைச் சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல் தெண் நீர் மலரின் தொலைந்த கண்ணே காமம் கரப்பு அரியவ்வே! |
வாரி முடித்த கூந்தலையுடைய இவள் தன்னைப் பிறர் கூறும் பழிச்சொற்கஞ்சி வளைகளைக் கழலாதவாறு செறித்து மறைத்தலாலே தோள்கள் வாட்டந் தோன்றாவாயின!; அன்றியும் தன் ஆயத்தாரோடு விளையாட் டயர்தலால் உடம்பிற் களைப்பும் அவ் விளையாட்டினா லுண்டாகியதென நினைப்பதற் குரியதாயிரா நின்றது; காவன் மிகுதிப்பட அன்னையானவள் பாதுகாக்கும் இவளின் பழைய நலமெல்லாம் சிதையும்படி காணுந்தோறும் அழுதலல்லாமலும்; நெருங்கிய நீர்மிக்க முத்துக்கள் விளைகின்ற கடற்பரப்பினையுடைய கொற்கை நகரத்து முன்புள்ள துறையிலிருக்கும், சிறுபசு அடைய செப்பு ஊர் நெய்தல் தௌ¢நீர் மலரின்கண் தொலைந்த சிறிய பசிய இலைகளையுடைய அழகமைந்த நெய்தலின் தௌ¤ந்த நீரிலுள்ள மலர் போலக் கண்களே அழகு குலைந்தன; அவை தாம் காமத்தைக் கரத்தலரியவாய் இராநின்றன; ஆதலின் நினக்கேற்றதொன்று செய்வாயாக!;
தலைவி துயர் ஆற்றாமை உணர்ந்த தோழி வரைவு கடாயது. - கணக்காயனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 23. குறிஞ்சி, இலக்கியங்கள், குறிஞ்சி, நற்றிணை, செப்பு, நெய்தல், தொலைந்த, கொற்கை, அன்றியும், எட்டுத்தொகை, சங்க, நீர்