நற்றிணை - 196. நெய்தல்
பளிங்கு செறிந்தன்ன பல் கதிர் இடைஇடை, பால் முகந்தன்ன பசு வெண் நிலவின், மால்பு இடர் அறியா, நிறையுறு மதியம்! சால்பும் செம்மையும் உடையை ஆதலின், நிற் கரந்து உறையும் உலகம் இன்மையின், |
5 |
எற் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்! நற் கவின் இழந்த என் தோள் போல் சாஅய், சிறுகுபு சிறுகுபு செரீஇ, அறி கரி பொய்த்தலின், ஆகுமோ அதுவே? |
பல கூறுகள் ஒன்றாகச் செறிந்தாற் போன்ற பலவாய கதிர்களின் இடையே இடையே பாலை முகந்து வைத்தாற்போன்ற குளிர்ச்சியையுடைய வெளிய நிலாவினையுடைய: மால் பிடர் அறியா நிறை உறு மதியம் மேகத்தின் பிடர் மேலே தோன்றிப் பிறரால் அறியப்படாத எல்லாக் கலைகளும் நிறைவுற்ற திங்களே!; நீதானும் நிறைவும் நேர்மையும் உடையை ஆதலானும்; நினக்குத் தெரியாத வணணம் மறைந்து உறையும் உலகமொன்று இன்மையானும்; எனக்குத் தோன்றாது மறைந்தொழுகும் எங்காதலர் இருக்கும் இடத்தினைக் காட்டுவாயாக! என்று இரந்து வேண்டினாள், அவள் அங்ஙனம் இரந்து வேண்டியும் திங்கள் விடை கூறிற்று இல்லையாகாலின் அதன்மேல் வெறுப்புற்று மீட்டும்¢ அதனை நோக்கித்¢ திங்களே!; நீ அறிந்த அளவு சான்று கூறாது பொய்யை மேற்கோடல் காரணமாக; நல்ல அழகிழந்த என் தோள்போல் வாட்டமுற்று; நாடோறும் சிறுகிச் சிறுகிச் குறைந்து நின் விழிப்புலம் மறைபடுதலாலே; நீ காட்டுவதுதான் இயலுமோ ? இயலாதன்றே; என்றாள்,
நெட்டிடை கழிந்து பொருள்வயிற் பிரிந்த காலத்து, ஆற்றாளாகிய தலைமகள் திங்கள் மேலிட்டுத் தன்னுள்ளே சொல்லியது. - வெள்ளைக்குடி நாகனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 196. நெய்தல், இலக்கியங்கள், நற்றிணை, நெய்தல், இடையே, பிடர், திங்களே, இரந்து, சிறுகிச், திங்கள், சிறுகுபு, கரந்து, சங்க, எட்டுத்தொகை, அறியா, மதியம், உடையை, உறையும்