நற்றிணை - 176. குறிஞ்சி
எம் நயந்து உறைவி ஆயின், யாம் நயந்து நல்கினம் விட்டது என்? நலத்தோன் அவ் வயின் சால்பின் அளித்தல் அறியாது, 'அவட்கு அவள் காதலள் என்னுமோ?' உரைத்திசின்- தோழி!- நிரைத்த யானை முகத்து வரி கடுப்பப் |
5 |
போது பொதி உடைந்த ஒண் செங் காந்தள் வாழை அம் சிலம்பின் வம்பு படக் குவைஇ, யாழ் ஓர்த்தன்ன இன் குரல் இன வண்டு, அருவி முழவின் பாடொடு ஒராங்கு, மென்மெல இசைக்கும் சாரல், |
10 |
குன்ற வேலித் தம் உறைவின் ஊரே. |
விறலீ! தலைமகளானவள் எம்மை விரும்பி உறைபவளாயிருக்கையில் யாமாக அவளை விரும்பி அவள் விரும்பியவாறு நல்கிவிட்டதுதான் என்னவிருக்கின்றது?; நம் நலத்திற்குக் காரணமாயிருக்கும் தலைமகனை அத் தலைவி பால் யாம் சால்பினாலே கொடுத்தது அறியாது; நிரைத்திருக்கின்ற யானையின் முகத்திலுள்ள கோடு போல அரும்புகள் பொதிந்தனவெல்லாம் மலர்ந்த ஒள்ளிய செங்காந்தள்; வாழையையுடைய சிலம்பின்கண் மணங்கமழாநிற்ப; யாழோசையைக் கேட்டாலொத்த இனிய குரலையுடைய கூட்டமாகிய வண்டுகள்; திரண்டு புகுந்து அருவியாகிய முழவொலியோடு ஒருதன்மைப்பட மெல்ல மெல்ல ஒலியாநிற்கும் சாரலிலே; குன்று சூழ்ந்து வேலியாகயுடைய அவர்கள் இருக்கின்ற ஊரிலுள்ளார்; தலைவிபால் அப் பரத்தை மிக்க காதலையுடையளாதலின் அத் தலைவி விருப்பத்தின்படி தலைவனை விடுத்தனள் என்று கூறாநிற்பரோ? ஆராய்ந்து ஒன்றனைக் கூறாய்; அங்ஙனம் ஆயின் மீட்டும் அவனை ஈங்கு நமது ஆற்றலானே கைக்கொண்டு போதுவாங்காண்!.
பரத்தை தலைவியின் பாங்கிக்குப் பாங்காயினார் கேட்ப, விறலிக்குச் சொல்லியது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 176. குறிஞ்சி, இலக்கியங்கள், நற்றிணை, குறிஞ்சி, விரும்பி, தலைவி, மெல்ல, பரத்தை, அவள், ஆயின், எட்டுத்தொகை, சங்க, நயந்து, யாம், அறியாது