நற்றிணை - 164. பாலை
'உறை துறந்திருந்த புறவில், தனாது செங் கதிர்ச் செல்வன் தெறுதலின், மண் பக, உலகு மிக வருந்தி உயாவுறுகாலைச் சென்றனர் ஆயினும், நன்று செய்தனர்' எனச் சொல்லின் தௌப்பவும், தௌதல் செல்லாய்- |
5 |
செங்கோல் வாளிக் கொடு வில் ஆடவர் வம்ப மாக்கள் உயிர்த் திறம் பெயர்த்தென, வெங் கடற்று அடை முதல் படு முடை தழீஇ, உறு பசிக் குறு நரி குறுகல் செல்லாது மாறு புறக்கொடுக்கும் அத்தம், |
10 |
ஊறு இலராகுதல் உள்ளாமாறே. |
தோழீ! மழைபெய்யாதொழிந்த பாலைநிலத்தின்கண் அந் நிலத்தின் தெய்வமாகிய ஆதித்தன் காய்தலானே; நிலம் பிளவுபட அதனால் உலகம் மிகவருந்தித் ன்புற்ற காலத்து; தலைவர் பொருள்வயிற் பிரிந்து அந்நிலத்துள்ள நெறியின்கண்ணே சென்றனராயினும் அவர் பொருள்மேற் சென்றாராதலின்; நல்லதொரு காரியத்தையே செய்தனரென்று என்னுடைய சொற்களால் நின்னைத் தௌ¤வித்தகாலையும்; வளைந்த வில்லையுடைய ஆறலைகள்வர் செம்மையுற்ற கோல்வடிவாகிய அம்பினாலே நெறியின்கண்ணே செல்லும் ஏதிலாளரைக் கொன்று உயிரைப் போக்கினமையாலே; இறந்து கிடந்த பிணங்கள் கொடிய மலைநெறியின் மருங்கே இலைகளால் மூடப்பட்டு முடைநாற்ற மிகுதலும்; அவற்றைத் தின்ன வந்த மிக்க பசியையுடைய குறிய நரி அம் முடை நாற்றம் பொறாமையால் அவ்விடத்து நெருங்காது பின்னே மீண்டு செல்லாநிற்கும்; சுரத்தின்கண் யாதுமோர் ஊறுபாடிலராய் வருதலை நினையாமையாலே நீ; யான் கூறிய வார்த்தைகளினாலே தௌ¤வடைந்தாயில்லை; அவ்வண்ணம் நீ வருந்தியிருப்பது அறிந்தனர் போலும், அவர் குறித்த இப் பருவத்து இற்றைநாளால் இங்கு வந்தனர்காண்;
பொருள் முடித்து வந்தான் என்பது, வாயில்கள்வாய்க் கேட்ட தோழி தலைவிக்குஉரைத்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 164. பாலை, இலக்கியங்கள், நற்றிணை, பாலை, அவர், நெறியின்கண்ணே, சங்க, எட்டுத்தொகை, முடை