நற்றிணை - 162. பாலை
'மனை உறை புறவின் செங் காற் பேடைக் காமர் துணையொடு சேவல் சேர, புலம்பின்று எழுதரு புன்கண் மாலைத் தனியே இருத்தல் ஆற்றேன்' என்று, நின் பனி வார் உண்கண் பைதல கலுழ, |
5 |
'நும்மொடு வருவல்' என்றி; எம்மொடு- பெரும் பெயர்த் தந்தை நீடு புகழ் நெடு நகர் யாயொடு நனி மிக மடவை!- முனாஅது வேனில் இற்றித் தோயா நெடு வீழ், வழி நார் ஊசலின், கோடை தூக்குதொறும், |
10 |
துஞ்சு பிடி வருடும் அத்தம் வல்லை ஆகுதல் ஒல்லுமோ, நினக்கே? |
பெரிய சீர்த்தியையுடைய தந்தையினது நீண்ட புகழ் பொருந்திய நெடிய மாளிகையின்கண்ணே; ஈன்ற தாயொடு பிரியாது வைகும் மிக்க இளமையுடையாய்!; முன்பு மனையிடத்து உறைகின்ற சிவந்த காலையுடைய புறாவின் பேடையாகிய அழகிய தன் துணையொடு அதன் ஆண்புறாவாகிய சேவல் கூடி மகிழாநிற்ப; அவற்றை நோக்கி வருத்தமுடையதாகும்படி எழுகின்ற துன்பஞ் செய்யும் மாலைப்பொழுதிலே தனியே இருப்பதற்கு ஆற்றேனாவேன் என்று; நின் நீர் வடிகின்ற மையுண்ட கண்கள் துன்புற்றனவாய்க் கலுழா நிற்ப எம்மை நோக்கி; யான் நும்முடனே நீயிர் செல்லுமிடத்து வருகிற்பேன் என்று கூறாநின்றனை; வேற்படை போலும் இலையையுடைய இத்தி மரத்தினுடைய நிலத்திலே படாது தொங்குகின்ற நெடிய விழுது; வைகறையில் மேல் காற்று வீசுந்தோறும்; ஊசலாடுதல் போன்று கீழே துயிலுகின்ற பிடியானைமீது புரளா நிற்கும்; பாலையின் கண்ணே செல்லுதல் நினக்குப் பொருந்துவ தொன்றாகுமோ? ஆகாதன்றே! ஆதலின் நீ வரற்பாலை அல்லைகாண்;
'உடன் போதுவல்' என்ற தலைவிக்குத் தலைவன் சொற்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 162. பாலை, இலக்கியங்கள், நற்றிணை, பாலை, புகழ், நெடு, நெடிய, நோக்கி, நின், சேவல், எட்டுத்தொகை, சங்க, துணையொடு, தனியே