நற்றிணை - 160. குறிஞ்சி
நயனும், நண்பும், நாணு நன்கு உடைமையும், பயனும், பண்பும், பாடு அறிந்து ஒழுகலும், நும்மினும் அறிகுவென்மன்னே- கம்மென எதிர்த்த தித்தி, ஏர் இள வன முலை விதிர்த்து விட்டன்ன அந் நுண் சுணங்கின், |
5 |
ஐம் பால் வகுத்த கூந்தல், செம் பொறி திரு நுதல் பொலிந்த தேம் பாய் ஓதி, முது நீர் இலஞ்சிப் பூத்த குவளை எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள் அரி மதர் மழைக் கண் காணா ஊங்கே. |
10 |
மேன்மேலே தோன்றிய தித்தியையும் எழுச்சியையுடைய இளைய அழகிய கொங்கையின்மேலே அள்ளித் தௌ¤த்தாற் போன்ற அழகிய நுண்ணிய தேமலையும்; ஐம் பகுதியாகப் பகுக்கப்பட்ட சிவந்த விளங்கிய நெற்றிமேலே பொலிவு பெற்ற தேன்பரவிய கூந்தலாகிய ஓதியையும் உடைய இவளுடைய; நாட்பட்ட நீர் பொருந்திய பொய்கையிலே மலர்ந்த குவளை மலரை ஒன்றோடொன்று எதிர்எதிர் வைத்துத் தொடுத்தாற் போன்ற செவ்வரி பரந்த மதர்த்த குளிர்ச்சியையுடைய கண்ணையும் யான் காண்பதன்முன் உவ்விடத்தே; யாருடனும் விளங்கின கலந்த உறவையும், நண்பும் சுற்றந் தழுவலும் பகைவரை வசித்தலுமாகிய இரு வகை நட்பையும்; தன்னோடொவ்வாத தாழ்ந்தார்மாட்டு ஒன்றும் இரவாதவாறு பெற்ற நாணம் நன்றாகவுடைமையையும்; பிறர் இரந்தவழி நன்னெறியிலே கரவாமலீயும் கொடையையும்; தீயசெயல் கண்டவிடத்து அச் செயலில் உள்ளஞ் செல்லாதவாறு மீட்டு நன்னெறிக்கண்ணே நிறுத்தும் பண்பையும்; உலகவொழுக்கமறிந்து ஒழுகுவதனையும்; நும்மினுங்காட்டில் ஆராய்ந்து அவற்றை யானுடையனாகியிருந்தேன்; இப்பொழுது இவள் கண்ணை நோக்கிய வழி அவை யாவும் என்மாட்டு அவ்வண்ணம் இல்லையாகிக் கழிந்து வேறு வண்ணமாயுண்டாயின; இங்ஙனம் வேறுவகை எய்தியபின் நீ இரங்கியாவதென்னை கொலாம்;
கழற்று எதிர்மறை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 160. குறிஞ்சி, இலக்கியங்கள், குறிஞ்சி, நற்றிணை, இவள், அழகிய, பெற்ற, குவளை, நண்பும், எட்டுத்தொகை, சங்க, நீர்