நற்றிணை - 146. குறிஞ்சி
வில்லாப் பூவின் கண்ணி சூடி, 'நல் ஏமுறுவல்' என, பல் ஊர் திரிதரு நெடு மாப் பெண்ணை மடல் மானோயே!- கடன் அறி மன்னர் குடை நிழற் போலப் பெருந் தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து, |
5 |
இருந்தனை சென்மோ- 'வழங்குக சுடர்!' என, அருளிக் கூடும் ஆர்வ மாக்கள் நல்லேம் என்னும் கிளவி வல்லோன் எழுதி அன்ன காண் தகு வனப்பின் ஐயள், மாயோள், அணங்கிய |
10 |
மையல் நெஞ்சம் என் மொழிக் கொளினே! |
அன்போடு நெருங்கிய மகிழ்ச்சியையுடைய மாந்தர் நெருங்கிக்கூறு மீக்கூற்றால் யாம் நல்லேம் என்னும் புகழ்ச்சொல் அடையப்பெற்ற சித்திரந்தீட்டுவதில் வல்ல ஓவியன்; எழுதிவைத்தாலொத்த காட்சி தக்க அழகினையுடைய மெல்லியளாகிய மாமை நிறத்தையுடையவளால் வருத்தம் ஏறட்டுக்கொண்ட; மயக்கத்தையுடைய நெஞ்சமே!; விலைக்கு விற்றற்கியலாத பூளைமலரையும் உழிஞைப்பூவையும் எருக்கம்பூவையும் ஆவிரம்பூவோடு கலந்து கட்டிய மாலையைச் சூடி; யான் நல்ல பித்தேறினேன் என்னும் படி பல ஊர்களிலுஞ் சென்று திரிகின்ற; நெடிய கரிய பனைமடலாலே கட்டிய குதிரையையுடையாய்; நீ என் வார்த்தையை ஏற்றுக்கொள்ள விரும்புவையாயின்; ஞாயிறுதான் வெயில் வீசி ஒடுங்குவதாக என்று அவ்வெயிலின் வெம்மை அடங்குமளவும்; முறை தெரிந்து உலகைப் பாதுகாக்கும் அரசரின் குடைநிழல் குளிர்ச்சியுறுமாறுபோலே பெரிய தண்ணென்ற மரத்தின் நிழலின்கண்ணே; குதிரையினின்றிழிந்து சிறிது பொழுது தங்கியிருந்து பின்பு செல்வாயாக!
பின்னின்ற தலைவன்முன்னிலைப் புறமொழியாக, தோழி கேட்பச்சொல்லியது. - கந்தரத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 146. குறிஞ்சி, இலக்கியங்கள், குறிஞ்சி, என்னும், நற்றிணை, நல்லேம், கட்டிய, சிறிது, சூடி, எட்டுத்தொகை, சங்க, தண்ணென்ற