நற்றிணை - 124. நெய்தல்
ஒன்று இல் காலை அன்றில் போலப் புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை யானும் ஆற்றேன்; அதுதானும் வந்தன்று- நீங்கல்; வாழியர்; ஐய!- ஈங்கை முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர், |
5 |
நவ்வி நோன் குளம்பு அழுந்தென, வெள்ளி உருக்குறு கொள்கலம் கடுப்ப, விருப்புறத் தெண் நீர்க் குமிழி இழிதரும் தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே. |
ஒன்று பிரிந்த காலத்து மற்றோர் அன்றிற் பறவை ஆற்றாதிறந்தொழிதல்போலத் தனிமையுற்றுறையும் புன்கணமைந்த வாழ்க்கையை; யானும் ஆற்றாமல் இறந்துபடுவேன் ஆவேன்; அங்ஙனம் ஆற்றாமைக்குக் காரணமான ஈங்கையின் அரும்பும் புனமல்லிகை மலரும் மணலாலமைந்த உயர்ந்த திடரிலுதிர்ந்து; மான்களின் வலிய குளம்பினால் மிதிபட் டழுந்துகையினாலே; வெள்ளியை மூசை (குகை)யிலிட்டு உருக்கிச் சாய்த்தாற் போல விருப்பமுறும்படி அவற்றினின்று தௌ¤ந்த நீர்க் குமிழியாக வடியும்; தண்ணீரைப் பெற்றுநின்ற கூதிர்ப்பருவமாகிய; அதுதானும் வந்திறுத்துவிட்டது; ஆதலின் ஐயனே என்னைக் கைவிட்டு நீங்காதுறைவாயாக!
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவற்கு உரைத்தது. - மோசி கண்ணத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 124. நெய்தல், இலக்கியங்கள், நற்றிணை, நெய்தல், அதுதானும், நீர்க், யானும், ஒன்று, எட்டுத்தொகை, சங்க