நற்றிணை - 122. குறிஞ்சி
இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத கருங் கால் செந்தினை கடியுமுண்டென; கல்லக வரைப்பில் கான் கெழு சிறுகுடி மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின; 'நரை உரும் உரறும் நாம நள் இருள் |
5 |
வரையக நாடன் வரூஉம் என்பது உண்டுகொல்? அன்றுகொல்? யாதுகொல் மற்று?' என நின்று, மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி, அன்னையும் அமரா முகத்தினள்; நின்னொடு நீயே சூழ்தல் வேண்டும்- |
10 |
பூ வேய் கண்ணி!- அது பொருந்துமாறே. |
நீலமலர் போலுங் கண்ணையுடையாய்! இருங் கல் அடுக்கத்து என்னையார் உழுத கருங் கால் செந்தினை கடியும் உண்டன பெரிய மலையின் பக்கத்தில் என்னையன்மார் உழுது விதைத்த கரிய அடித் தண்டினையுடைய செவ்விய தினைக்கதிரெல்லாங் கொய்யப்பட்டன; மலைசூழ்ந்த இடத்திலிருக்கின்ற கானகத்தே பொருந்திய சிறுகுடியின் வளப்பத்தையுடைய பக்கங்களிலுள்ள மல்லிகையும் அரும்புண்டாயின; இன்னதொரு மின்னொளியுடன் கூடிய இடி முழங்குகின்ற அச்சத்தையுடைய இரவு நடு யாமத்து இருளில் மலைசூழ்ந்த நாட்டையுடைய தலைவன் வருவான் என்பது உண்மையோ ? இல்லையோ ? வேறுயாதோ ? என நின்று ஆராயவல்ல உள்ளத்துடனே; அயலார்க்குத் தெரியாதபடி அவற்றைக் கூறிக்கொண்டு அன்னையும் விரும்பாத கொடுமை தோன்றிய முகத்தினளா யிராநின்றாள்; ஆதலால் அவனோடுண்டாகிய களவொழுக்கம் இனி நிகழுமா ? என்பதனை நின் உள்ளத்தாலே நீயே ஆராய்ந்தறியவேண்டுங்காண்!;
சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு உரைப்பாளாய்த் தலைவன் கேட்பச்சொல்லியது. - செங்கண்ணனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 122. குறிஞ்சி, இலக்கியங்கள், நற்றிணை, குறிஞ்சி, என்பது, நின்று, அன்னையும், நீயே, தலைவன், மலைசூழ்ந்த, செந்தினை, கருங், சங்க, எட்டுத்தொகை, இருங், அடுக்கத்து, உழுத, கால்