நற்றிணை - 116. குறிஞ்சி
'தீமை கண்டோர் திறத்தும்பெரியோர் தாம் அறிந்து உணர்க' என்பமாதோ; வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று, இரு வெதிர் ஈன்ற வேல் தலைக் கொழு முளை, சூல் முதிர் மடப் பிடி, நாள் மேயல் ஆரும் |
5 |
மலை கெழு நாடன் கேண்மை, பலவின் மாச் சினை துறந்த கோள் முதிர் பெரும் பழம் விடர் அளை வீழ்ந்து உக்காஅங்கு, தொடர்பு அறச் சேணும் சென்று உக்கன்றே அறியாது ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த |
10 |
குறிஞ்சி நல் ஊர்ப் பெண்டிர் இன்னும் ஓவார், என் திறத்து அலரே! |
கொடிய தீத்தொழிலைச் செய்பவரிடத்து அச்செயலை நேரிலே கண்டு வைத்தும் உள்ளத்தாலாராய்ந்து அத்தொழில் செய்வோர் இனி அதனைச் செய்யா தொழிவாராக என்று பலபடியாக நுவன்று பெரியோர் பொறுத்திருப்பர்; அங்ஙனமுமாகாது சூல் முதிர்ந்த இளம்பிடியானை அறியாமையாலே தன் வயிற்றிலுள்ள சூல் அழிந்து புறம் போந்து விழுமாறு பெரிய மூங்கிலில் முளைத்தெழுந்த இலையில்லாத கொழுவிய முளையை விடியலிலே சென்று தின்னாநிற்கும்; மலைவிளங்கிய நாடன் என்னைக் கை விட்டமை(யால)¢ அவனுடைய கேண்மையானது; பலாவின் கரிய கிளையினின்று கனிந்து கீழே விழுகின்ற காய் முதிர்ந்த பெரிய பழம் பிறர் உண்ணாதபடி மலையின் பிளப்பாகிய அளையினுள் விழுந்தொழிந்தாற்போல தொடர்ச்சியறப் பன்னாளின் முன்னே சென்றொழிந்தது; அதனை அறியாது பெரிய மலைப் பக்கத்திலுள்ள இருள் செறிந்த குவட்டிலிருந்த குறிஞ்சியிலுள்ள நல்ல ஊரின்கணிருக்கும் பெண்டிர்தாம்; என்னிமித்தமாக இன்னும் பழிகூறுதலை ஒழிந்தாரிலர்; இனி யான் அதனை எவ்வண்ணம் ஆற்றுவேன் ?
வரைவு நீட்டிப்ப ஆற்றாளாய தலைவி தோழிக்கு வன்புறை எதிரழிந்து சொல்லியது. - கந்தரத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 116. குறிஞ்சி, குறிஞ்சி, இலக்கியங்கள், நற்றிணை, பெரிய, சூல், இருள், முதிர்ந்த, இன்னும், அறியாது, நாடன், எட்டுத்தொகை, சங்க, முதிர், பழம், சென்று