நற்றிணை - 109. பாலை
'ஒன்றுதும்' என்ற தொன்று படு நட்பின் காதலர் அகன்றென, கலங்கிப் பேதுற்று, 'அன்னவோ, இந் நன்னுதல் நிலை?' என, வினவல் ஆனாப் புனையிழை! கேள், இனி உரைக்கல் ஆகா எவ்வம்; இம்மென |
5 |
இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில், துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்து, உச்சிக் கட்டிய கூழை ஆவின் நிலை என, ஒருவேன் ஆகி உலமர, கழியும், இப் பகல் மடி பொழுதே! |
10 |
'நின்னைப் பிரியேமாகி எப்பொழுதும் ஒன்றியிருத்¢தும்' என்று கூறிய பழைமையாகிய நட்பினின்றும் காதலர் பிரிந்தகன்றதனாலே கலங்கி மயங்குற்று; இந்நல்ல நுதலையுடையாளுடைய நிலைமை அப்படிப்பட்டனவோ? என்று வினாவுதல் ஒழியாத அலங்கரித்த அணிகலனையுடையாய் யான் கூறுகின்றதனைக் கேட்பாயாக! இனி உரைக்கல் ஆகா எவ்வம் இம்மென இப்பொழுது கூறுதற்கியலாத துன்பம் விரைந்துபற்ற; ஒலிக்கும் வாடை வீசுதலையுடைய ஆதித்த மண்டிலம் மேற்கே மறைகின்ற இம் மாலைகாலமானது; இருண் மிக்க இராப்பொழுதிலே சேற்றையுடைய தொழுவத்தினின்று வேற்றிடத்திலே கட்டவேண்டு மற்றத்து அங்ஙனஞ் செய்யாது அத்தொழுவத்துள் கீழினும் படுக்கவிடாது நின்ற நிலையிலே நிற்குமாறு தலைக்கயிற்றை யிழுத்து உச்சியிலே தூக்கி மேற்கை மரத்தில் இறுகப்பிணித்த குறுமையாகிய பசுவினது நிலைமையைப் போல; யான் ஒருத்தியாகியே நின்று உள்ளஞ் சுழன்று வருந்தும் வண்ணம் மெல்ல மெல்ல நீங்கா நிற்கும்; இவ்வேளை யான் எங்ஙனம் ஆற்றியிருப்பேனென்று புலம்புவ தன்றி வேறில்லைக்காண்;
பிரிவிடை ஆற்றாளாய தலைமளது நிலைகண்ட தோழிக்குத் தலைமகள்சொல்லியது. - மீளிப் பெரும்பதுமனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 109. பாலை, இலக்கியங்கள், பாலை, யான், நற்றிணை, இம்மென, வாடை, மெல்ல, எவ்வம், நிலை, எட்டுத்தொகை, சங்க, காதலர், உரைக்கல்