குறுந்தொகை - 63. பாலை - தலைவன் கூற்று
(பொருள் தேடவேண்டுமென்று துணிந்த நெஞ்சை நோக்கி, "பொருள் தேடச் செல்லின் தலைவியைப் பிரிய வேண்டும்; அவளைப் பிரிவது அரிது" என்று உணர்த்தித் தலைவன் செலவு தவிர்ந்தது.)
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்லெனச் செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு அம்மா அரிவையும் வருமோ எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே. |
|
- உகாய்க்குடிகிழார் |
நெஞ்சே! இரவலர்க்குக் கொடுத்தலும் இன்பங்களை அனுபவித்தலும் பொருளில்லாத வறியவர்க்கு இல்லையென்று கருதி பொருள் செய்தற்குரிய செயல்களை மிக எண்ணாநின்றாய்; அச்செயல் செய்தற்குத் துணையாக அழகிய மாமை நிறத்தையுடைய தலைவியும் வருவாளோ? எம்மை மட்டும் செலுத்துகின்றாயோ? சொல்லுவாயாக.
முடிபு: நெஞ்சே, செய்வினை எண்ணுதி; அரிவையும் வருமோ? எம்மை உய்த்தியோ? உரைத்திசின்.
கருத்து: இவளைப் பிரிந்து செல்லுதல் இயலாதது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 63. பாலை - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், பாலை, நெஞ்சே, எம்மை, பொருள், குறுந்தொகை, கூற்று, உய்த்தியோ, உரைத்திசின், வருமோ, அரிவையும், எட்டுத்தொகை, செய்வினை, எண்ணுதி, சங்க