குறுந்தொகை - 41. பாலை - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில் தலைவியின் மேனியிற் பொலிவழிந்த வேறுபாடு கண்டு கவலையுற்ற தோழியை நோக்கி, “தலைவர் உடனிருப் பின் நான் மகிழ்வுற்று விளங்குவேன்; பிரியின் பொலிவழிந்தவளாவேன்” என்று கூறியது.)
காதலர் உழைய ராகப் பெரிதுவந்து சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற அத்த நண்ணிய அங்குடிச் சீறூர் மக்கள் போகிய அணிலாடு முன்றிற் புலம்பில் போலப் புல்லென்று |
5 |
அலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே. | |
- அணிலாடு முன்றிலார். |
தோழி! தலைவர் பக்கத்தவராக இருப்ப மிக மகிழ்ச்சியுற்று விழாக்கொண்ட ஊரினர் மகிழ்வதைப் போல நிச்சயமாக விரும்பி மகிழ்வேன்; அவர் என்னைப் பிரிந்து சென்ற காலத்தில் பாலைநிலத்திற் பொருந்திய அழகிய குடியையுடைய சிறிய ஊரில் மனிதர் நீங்கிச் சென்ற அணில் விளையாடுகின்ற முற்றத்தையுடைய தனிமையுள்ள வீட்டைப்போல பொலிவழிந்து வருந்துவேன்.
முடிபு: தோழி, காதலர் உழையராகப் புகல்வேன்; அவர் அகன்ற ஞான்று அலப்பென்.
கருத்து: தலைவர் பிரிந்தமையின் வருத்தமுடையேனாயினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 41. பாலை - தலைவி கூற்று, இலக்கியங்கள், பாலை, குறுந்தொகை, கூற்று, தலைவி, அகன்ற, தோழி, அவர், சென்ற, அலப்பென், தலைவர், காதலர், எட்டுத்தொகை, சங்க, காலத்தில், புகல்வேன், அணிலாடு