குறுந்தொகை - 39. பாலை - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில் ஆற்றாதிருந்த தலைவியை, “நீ ஆற்றல் வேண்டும்” என்று வற்புறுத்திய தோழிக்கு, “தலைவர் சென்ற வழியானது கடத்தற்கரிய கொடுமையை யுடையதென்று அறிந்தார் கூறுவர்; அதனைக் கேட்ட யான் ஆற்றுவது எங்ஙனம்?” என்று தான் ஆற்றாமையின் காரணத்தைத் தலைவி தெரிவித்தது.)
வெந்திறற் கடுவளி பொங்காப் போந்தென நெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் மலையுடை அருஞ்சுரம் என்பநம் முலையிடை முனிநர் சென்ற ஆறே. |
|
- அவ்வையார். |
தோழி! நம் நகிலினிடத்துத் துயிலுதலை வெறுத்தவர் பிரிந்து சென்ற வழியானது வெம்மையான வலியையுடைய விரைவான காற்றானது மரக்கிளையிலே வீசுதலால் வாகை மரத்தினது நெற்றினது முற்றிய வற்றலானது ஒலித்தற்கு இடமாகிய மலைகளையுடைய கடத்தற்கரிய சுரமாகும் என்று கூறுவர்.
முடிபு: முனிநர் சென்ற ஆறு அருஞ்சுரமென்பர்.
கருத்து: தலைவர் சென்ற வழியின் கொடுமையை நினைந்து நான் ஆற்றேனாயினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 39. பாலை - தலைவி கூற்று, சென்ற, இலக்கியங்கள், தலைவி, குறுந்தொகை, பாலை, கூற்று, கூறுவர், முனிநர், கொடுமையை, கடத்தற்கரிய, எட்டுத்தொகை, வழியானது, சங்க