குறுந்தொகை - 350. பாலை - தோழி கூற்று
(தலைவன் பிரிந்தபின் வேறுபட்ட தலைவியை நோக்கி, "நாம்அவர் செல்லும்பொழுது போகற்கவெனத் தடுத்தேமேல் அவர் செல்லார்.அப்பொழுது உடம்பட்டு இப்பொழுது வருந்துதல் தக்கதன்று" என்றுதோழி கூறியது.)
அம்ம வாழி தோழி முன்னின்று பனிக்கடுங் குரையஞ் செல்லா தீமெனச் சொல்லின மாயிற் செல்வர் கொல்லோ ஆற்றய லிருந்த இருந்தோட் டஞ்சிறை நெடுங்காற் கணந்துள் ஆளறி வுறீஇ |
5 |
ஆறுசெல் வம்பலர் படைதலை பெயர்க்கும் மலையுடைக் கான நீந்தி நிலையாப் பொருட்பிணிப் பிரிந்திசி னோரே. |
|
- ஆலத்தூர் கிழார். |
தோழி! ஒன்று கூறுவன் கேட்பாயாக வழியின்அயலிலே இருந்த பெரிய தொகுதியாகிய அழகிய சிறகுகளையும் நெடிய காலையும்உடைய கணந்துட் பறவைகள் தமக்குஊறு விளைக்கும் வேட்டுவ மக்களுண்மையை அறிவுறுத்தி வழிப் போகும் பிரயாணிகளது சேனைத்திரளை இடத்தினின்றுநீங்கச் செய்யும் மலையையுடையகாட்டைக் கடந்து நிலையில்லாத பொருள் வேட்கையினால் நம்மைப் பிரிந்துசென்றோர் அவர் பிரியுங்காலத்து அவர்முன்னே நின்று யாம் பனியினதுகடுமையையுடையேம் ஆதலின் போதலைஒழிமின் என்று கூறினோமாயின் போவாரோ?
முடிபு: தோழி, முன்னின்று செல்லாதீமெனச் சொல்லினமாயின் பிரிந்திசினோர் செல்வர்கொல்?
கருத்து: நாம் தலைவரை முன்பே தடுத்திருப்பின் செல்லார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 350. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், பாலை, குறுந்தொகை, கூற்று, முன்னின்று, செல்லார், எட்டுத்தொகை, சங்க, அவர்