குறுந்தொகை - 332. பாலை - தோழி கூற்று
(தலைவன் வரையாமல் வந்தொழுகிய காலத்தில் ஒருநாள் அவன்சிறைப்புறத்தில் நிற்பத் தலைவிக்கு, “தலைவனுக்கு நின்துயர் நிலையைக்கூறினால் என்?” என்று தோழி கூறியது.)
வந்த வாடைச் சில்பெயற் கடைநாள் நோய்நீந் தரும்படர் தீரநீ நயந்து கூறின் எவனோ தோழி நாறுயிர் மடப்பிடி தழீஇத் தடக்கை யானை குன்றச் சிறுகுடி யிழிதரு |
5 |
மன்ற நண்ணிய மலைகிழ வோற்கே. | |
- மதுரை மருதங்கிழார் மகனார் இளம்போத்தனார். |
தோழி! மணம் வீசுகின்ற மூச்சையுடைய மடப்பத்தையுடைய பெண்யானையைத் தழுவி வளைந்த கையையுடைய யானை குன்றினிடத்துள்ள சிற்றூரின்கண் இறங்கிச் செல்லும் மன்றங்கள் பொருந்திய மலையையுடைய தலைவனுக்கு வாடை வந்த சிலவாகிய பெயலையுடைய நாளின்கடையாமத்தில் வருத்தத்திலேதுளையும் பொறுத்தற்கரிய நின் துன்பம் தீரும் வண்ணம் நீ விரும்பி கூறத்தகுவனவற்றைக்கூறினால் என்ன துன்பம் உளதாகும்?
முடிபு: தோழி, மலைகிழவோற்குப் படர்தீர நீ கூறின் எவனோ?
கருத்து: நினது துன்ப மிகுதியைத் தலைவனுக்கு நீயே கூறவேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 332. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, பாலை, யானை, தலைவனுக்கு, துன்பம், எவனோ, வந்த, எட்டுத்தொகை, சங்க, கூறின்