குறுந்தொகை - 243. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி வருந்தியது கண்டு, "நீ ஆற்றி இருக்க வேண்டும்" என்று வற்புறுத்திய தோழியை நோக்கி, "நான் தலைவனை நினைப்பதனால் ஆற்றாமை மீதூர்கின்றது; இனி நினையேன்" என்று இரங்கித் தலைவி கூறியது.)
மானடி யன்ன கவட்டிலை அடும்பின் தார்மணி யன்ன ஒண்பூக் கொழுதி ஒண்தொடி மகளிர் வண்ட லயரும் புள்ளிமிழ் பெருங்கடற் சேர்ப்பனை உள்ளேன் தோழி படீஇயர்என் கண்ணே. |
5 |
- நம்பி குட்டுவனார். |
தோழி! மானின் குளம்பைப் போன்ற பிளவை உடைய இலைகளை உடைய அடும்பினது குதிரைக் கழுத்தில் இடும் மாலையின்கண் உள்ள மணியைப் போன்ற ஒள்ளிய பூவை வலிய அலர்த்தி ஒள்ளிய வளையை உடைய பெண்கள் விளையாட்டைச் செய்யும் பறவைகள் ஒலிக்கும் பெரிய கடற்கரைக்குத் தலைவனை இனி நினையேன்; ஆதலின் என் கண்கள் துயில்க.
முடிபு: தோழி, சேர்ப்பனை உள்ளேன்; என்கண் படீஇயர்.
கருத்து: தலைவனை நினையாது இருத்தல் அரிதாதலின் ஆற்றாமையும் நீங்கல் அரிது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 243. நெய்தல் - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், நெய்தல், உடைய, தோழி, தலைவனை, குறுந்தொகை, கூற்று, ஒள்ளிய, உள்ளேன், சேர்ப்பனை, எட்டுத்தொகை, நினையேன், யன்ன, சங்க