குறுந்தொகை - 237. பாலை - தலைவன் கூற்று
(பொருளுக்காகத் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் அதனைஈட்டிக் கொண்டு மீள்கையில், தேர்ப்பாகனை நோக்கி, ‘‘எனக்கும்தலைவிக்கும் உள்ள இடையிடம் சேயதாகவும் பல இடையூறுகளைஉடையதாகவும் உள்ளது. ஆயினும் என் நெஞ்சு அவள்பால் விரைந்துசென்றது” என்று கூறியது.)
அஞ்சுவ தறியா தமர்துணை தழீஇய நெஞ்சுதப் பிரிந்தன் றாயினும் எஞ்சிய கைபிணி நெகிழின்அ தெவனோ நன்றும் சேய வம்ம இருவா மிடையே மாக்கடல் திரையின் முழங்கி வலனேர்பு |
5 |
கோட்புலி வழங்குஞ் சோலை எனைத்தென் றெண்ணுகோ முயக்கிடை மலைவே. |
|
- அள்ளூர் நன்முல்லையார். |
பாக! அஞ்சுதலைஅறியாமல் நாம் விரும்பும்தலைவியைத் தழுவும் பொருட்டு என் நெஞ்சு நம்மைப் பிரிந்து சென்றது; ஆனாலும் குறைபாடாக உள்ள கையாற்றழுவுதல் நெகிழுமாயின் நெஞ்சு சென்று தழுவிய அதனால் பயன் யாது? யானும் தலைவியுமாகிய இருவருக்கும் இடையில்உள்ள இடங்கள் மிக்க சேய்மையைஉடையன; தலைவியோடு சேர்தற்குஇடையிலே உள்ள தடையாகிய கொலைசெய்யும் புலியானது கரியகடலின் அலையைப் போல ஆரவாரம் செய்து வலமாக எழுந்து உலவுகின்றசோலை எத்தனை என்று எண்ணுவேன்?
முடிபு: நெஞ்சு பிரிந்தன்று; ஆயினும் நெகிழின் எவன்? இடைசேய;மலைவாகிய சோலை எனைத்தென்று எண்ணுகு?
கருத்து: தலைவி உள்ள இடம் நெடுந்தூரத்தில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 237. பாலை - தலைவன் கூற்று, நெஞ்சு, உள்ள, இலக்கியங்கள், தலைவன், கூற்று, குறுந்தொகை, பாலை, ஆயினும், சோலை, பிரிந்து, எட்டுத்தொகை, சங்க, உள்ளது