குறுந்தொகை - 224. பாலை - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்து, “இவள் இறந்து படுவாளோ!” என்றுகவலையுற்ற தோழிக்கு முன்னிலைப் புறமொழியாக, “தலைவரைப்பிரிந்த துயரினும் இவள் வருந்துதலைக் காணுந்துயர் பெரிதாயிற்று”என்று தலைவி கூறியது.)
கவலை யாத்த அவல நீளிடைச் சென்றோர் கொடுமை யெற்றித் துஞ்சா நோயினு நோயா கின்றே கூவற் குராலான் படுதுயர் இராவிற் கண்ட உயர்திணை ஊமன் போலத் |
5 |
துயர்பொறுக் கல்லேன் தோழி நோய்க்கே. | |
- கூவன் மைந்தனார். |
கிணற்றின்கண்ணே வீழ்ந்த குராற்பசு படும் துன்பத்தை இராக்காலத்தில் கண்ட ஊமையாக இருப்பவன் அத்துயரத்தை வெளியிட முடியாமல்துன்புற்றது போல என் பொருட்டுத்தோழி படும் வருத்தத்தினால் துயரைப் பொறுக்கும் ஆற்றல் இல்லேனாயினேன்; அத்துயரம் கவர்த்த வழிகளில் யாமரங்களைஉடைய துன்பத்தை உடைய நீண்டவழிகளில் எம்மைப் பிரிந்துசென்ற தலைவரது கொடுமையை நினைந்து துயிலாமல் இருக்கும் துன்பத்தைக் காட்டிலும் மிக்க துன்பமாகின்றது.
முடிபு: தோழி நோய்க்குத் துயர் பொறுக்கல்லேன்; துஞ்சா நோயினும் நோயாகின்று.
கருத்து: தோழி வருந்துதல் பயனற்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 224. பாலை - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, பாலை, குறுந்தொகை, கூற்று, தோழி, படும், துன்பத்தை, சங்க, எட்டுத்தொகை, துஞ்சா, கண்ட