குறுந்தொகை - 222. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தலைவியும் தோழியும் நீராடி ஒருங்கிருந்த இடத்து அத்தோழியின்பால் தலைவிக்குளதாய ஒற்றுமையை அறிந்து, “இவளே தலைவியைநாம் பெறுதற்குரிய வாயில்; இனி இவள் வாயிலாக நாம் இரந்து குறைபெறுதும்” என்று தலைவன் நினைந்தது.)
தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும் கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும் புணைகை விட்டுப் புனலோ டொழுகின் ஆண்டும் வருகுவள் போலு மாண்ட மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச் |
5 |
செவ்வெரி நுறழும் கொழுங்கடை மழைக்கட் டுளிதலைத் தலைஇய தளிரன் னோளே. |
|
- சிறைக்குடி யாந்தையார். |
மாட்சிமைப்பட்ட மழைக் காலத்தில் மலரும் பிச்சியினது நீர் ஒழுகும் வளவிய அரும்பினது சிவந்த புறத்தை யொத்த கொழுவிய கடையையும் குளிர்ச்சியையும் உடைய கண்களையும் மழைத்துளி தன்னிடத்தே பெய்யப்பெற்ற தளிரைப் போன்ற மென்மையையும் உடைய தலைவி தெப்பத்தின் தலைப்பை இத்தோழிகைக்கொண்டால் தானும் அதன் தலைப்பைக் கைக் கொள்வாள்; இவள் தெப்பத்தின் கடைப்பகுதியைப் பிடித்துக் கொள்ளின்தலைவியும் அதன் கடைப் பகுதியைக் கொள்வாள்; தெப்பத்தைக் கைசோர விட்டு நீரோடு இவள் சென்றால் அங்கும் தலைவி வருவாள் போலும்.
முடிபு: தளிரன்னோள் தலைப்புணைக் கொளின்தலைப் புணைக்கொள்ளும்; கடைப்புணைக் கொளின் கடைப்புணைக் கொள்ளும்; ஒழுகின் வருகுவள் போலும்.
கருத்து: இத்தோழி தலைவியோடு மனமொத்த நிலையினள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 222. குறிஞ்சி - தலைவன் கூற்று, இலக்கியங்கள், கடைப்புணைக், தலைவன், இவள், கொள்ளும், குறிஞ்சி, தலைப்புணைக், குறுந்தொகை, கூற்று, தெப்பத்தின், கொள்வாள், போலும், தலைவி, வருகுவள், எட்டுத்தொகை, கொளினே, சங்க, உடைய