குறுந்தொகை - 193. முல்லை - தலைவி கூற்று
(தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்றதோழி,”நீ வரையு நாளளவும் நின் நலம் தொலையாமல் ஆற்றி யிருந்தாய்” என்று பாராட்ட அது கேட்ட தலைவி, “அஃது என் வலியன்று; தலைவன் செய்த தண்ணளியே அத்தகைய நிலையைத்தந்தது” என்றது.)
மட்டம் பெய்த மணிக்கலத் தன்ன இட்டுவாய்ச் சுனைய பகுவாய்த் தேரை தட்டைப் பறையிற் கறங்கு நாடன் தொல்லைத் திங்கள் நெடுவெண் ணிலவின் மணந்தனன் மன்னெடுந் தோளே |
5 |
இன்று முல்லை முகைநாறும்மே. | |
- அரிசில் கிழார். |
தோழி! கள்ளைப் பெய்த நீலக்குப்பிகளைப் போன்ற சிறிய வாயையுடைய சுனையின்கண்உள்ளனவாகிய பிளந்த வாயையுடையதேரைகள் கிளிகடிகருவியாகிய தட்டைப் பறையைப் போல ஒலிக்கும்நாட்டையுடைய தலைவன் களவுக் காலமாகிய பழைய திங்களில் நெடியவெண்ணிலாவின்கண் என் நீண்ட தோள்களை தழுவினான்; அதனால் இக்காலத்தும் அவன் மேனியினது முல்லையினது மொட்டறா மலரின் மணத்தை என் தோள்கள்வீசா நிற்கும்.
முடிபு: நாடன், தொல்லைத் திங்கள் நிலவில் தோளை மணந்தனன்;இன்றும் முல்லை முகை நாறும்.
கருத்து: தலைவன் களவுக் காலத்துச் செய்த இன்னருள் இன்றளவும் மாறாது என்னைப் பாதுகாத்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 193. முல்லை - தலைவி கூற்று, முல்லை, தலைவி, இலக்கியங்கள், தலைவன், குறுந்தொகை, கூற்று, தொல்லைத், திங்கள், மணந்தனன், நாடன், களவுக், பெய்த, சங்க, செய்த, எட்டுத்தொகை, தட்டைப்