குறுந்தொகை - 191. முல்லை - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்திருந்த காலத்தில், “தம் பிரிவினால் யான்துன்புறுவேன் என்பதையும், தாம் பிரியுங்காலம் ஏற்றதன்று என்பதையும்கருதாமற் பிரிந்து சென்ற தலைவர் மீண்டு வரிற் புலந்து மறுப்பேன்”என்று தோழிக்குத் தலைவி கூறியது.)
உதுக்கா ணதுவே யிதுவென் மொழிகோ நோன்சினை யிருந்த இருந்தோட்டுப் புள்ளினம் தாம்புணர்ந் தமையிற் பிரிந்தோ ருள்ளத் தீங்குரல் அகவக் கேட்டு நீங்கிய ஏதி லாள ரிவண்வரிற் போதிற் |
5 |
பொம்ம லோதியும் புனையல் எம்முந் தொடாஅ லென்குவே மன்னே. |
|
- .......... |
தோழி! இதனைஎன்னென்று சொல்வேன்? வலியமரக்கிளையில் இருந்த பெரியதொகுதியை உடைய பறவைக் கூட்டங்கள் தாம் துணைகளோடு சேர்ந்தமையால் துணைவரைப் பிரிந்தாருடையதுன்பத்தை எண்ணாதனவாய் இனிய குரலால் அழைப்பக் கேட்ட பின்பும் நம்மைப் பிரிந்த அயற்றன்மையை உடையதலைவர் இங்கே மீண்டு வந்தால் மலர்களால் பொங்குதலைஉடைய கூந்தலையும் அலங்கரித்தலை யொழிக எம்மையும் தொடுதலை யொழிக என்று கூறுவம்; அங்ஙனம் செய்தலை உவ்விடத்துப் பார்ப்பாயாக.
முடிபு: இதுவென் மொழிகு? கேட்டும் நீங்கிய ஏதிலாளர்வரின்,‘‘ஓதியும் புனையல், தொடாஅல்” என்குவம்; அது உதுக்காண்.
கருத்து: நம்மைப் பிரிந்த தலைவர் வரின், அவரை ஏற்றுக்கொள்ளேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 191. முல்லை - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, முல்லை, குறுந்தொகை, கூற்று, நம்மைப், புனையல், யொழிக, நீங்கிய, பிரிந்த, தாம், எட்டுத்தொகை, சங்க, தலைவர், மீண்டு