குறுந்தொகை - 181. மருதம் - தலைவி கூற்று
(தலைவன் பரத்தையிற் பிரிந்த காலத்தில் தலைவியின் ஆற்றாமையைக் கண்ட தோழி அவனது பரத்தைமையை இழிவு தோன்றக்கூறிய போது, “நமக்கு எவ்வளவோ கடமைகள் உள; அவற்றைச்செய்து கொண்டிருத்தல் சாலும்;தலைவனைக் குறை கூறல் வேண்டா’’என்று தலைவி கூறியது.)
இதுமற் றெவனோ தோழி துனியிடை இன்னர் என்னும் இன்னாக் கிளவி இருமருப் பெருமை ஈன்றணிக் காரான் உழவன் யாத்த குழவியி னகலாது பாஅற் பைம்பயிர் ஆரு மூரன் |
5 |
திருமனைப் பலகடம் பூண்ட பெருமுது பெண்டிரேம் ஆகிய நமக்கே. |
|
- கிளிமங்கலங் கிழார். |
தோழி! பெரிய கொம்பையுடைய ஈன்றணிமையையுடையபெண்ணெருமையானது உழவனாற் கட்டப்பட்ட கன்றின் பக்கத்தினின்றும்அகலச் செல்லாமல் பக்கத்திலுள்ளபசிய பயிர்களை மேய்வதற் கிடமாகிய ஊரையுடைய தலைவனது செல்வத்தையுடைய மனைவாழ்வுக்குரிய பல கடப்பாடுகளைமேற்கொண்ட பெரிய முதிய பெண்டிராகிய நமக்கு புலவிக்காலத்தினிடையே தலைவர் இத்தகையரென்னும் இனிமையில்லாத கூற்றாகிய இதனாற் பயன் யாது?
முடிபு: தோழி, ஊரன் மனைக்கடம் பூண்ட நமக்கு இன்னாக்கிளவி எவன்?
கருத்து: தலைவனைக் குறை கூறாமல் நம் கடப்பாடுகளை நாம்செய்வோமாக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 181. மருதம் - தலைவி கூற்று, தோழி, இலக்கியங்கள், தலைவி, குறுந்தொகை, மருதம், கூற்று, பெரிய, நமக்கு, பூண்ட, குறை, எட்டுத்தொகை, தலைவனைக், சங்க