குறுந்தொகை - 179. குறிஞ்சி - தோழி கூற்று
(பகலில் வந்து தலைவியோடு அளவளாவிய தலைவனை நோக்கி,“எம் ஊருக்கு வந்து இரவில் தங்கிச் செல்வாயாக” என்று தோழி கூறியது.)
கல்லென் கானத்துக் கடமா வாட்டி எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன செல்லல் ஐஇய உதுவெம் மூரே ஓங்குவரை யடுக்கத்துத் தீந்தேன் கிழித்த குவையுடைப் பசுங்கழை தின்ற கயவாய்ப் |
5 |
பேதை யானை சுவைத்த கூழை மூங்கிற் குவட்டிடை யதுவே. |
|
- குட்டுவன் கண்ணனார். |
ஐய! கல்லென்னும்ஆரவாரத்தையுடைய காட்டின் கண் கடமாவை நீ அலைப்ப பகற் பொழுதும்மங்கியது; நாய்களும் நின்னுடன்வேட்டையாடி இளைப்பை அடைந்தன; போகற்க; உயர்ந்த மலைப்பக்கத்தில் இனிய தேனிறாலைக்கிழித்த கூட்டமாகிய பசிய மூங்கில்களின்குருத்தைத் தின்ற ஆழ்ந்த வாயையுடைய பேதைமையையுடைய யானை தின்றதனாற் கூழையாகிய மூங்கிலையுடைய உச்சியின் இடையே உள்ளதாகிய அஃது எமது ஊராகும்.
முடிபு: ஐய, எல்லும் எல்லின்று; ஞமலியும் இளைத்தன; செல்லல்;குவட்டிடையதுவாகிய; உது எம் ஊர்.
கருத்து: இரவில் எம்முடைய ஊருக்கு வந்து தங்கிச் செல்வாயாக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 179. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, வந்து, குறிஞ்சி, கூற்று, குறுந்தொகை, ஞமலியும், செல்லல், இளைத்தன, தின்ற, யானை, எல்லின்று, ஊருக்கு, எட்டுத்தொகை, சங்க, இரவில், தங்கிச், எல்லும்