குறுந்தொகை - 147. பாலை - தலைவன் கூற்று
(தலைவன் தலைவியைப் பிரிந்து சென்ற இடத்துத் துயிலும் பொழுது அவளைக் கனாவிற் கண்டு பிரிவாற்றாமற் சொல்லியது.)
வேனிற் பாதிரிக் கூன்மல ரன்ன மயிரேர் பொழுகிய வங்கலுழ் மாமை நுண்பூண் மடந்தையைத் தந்தோய் போல இன்றுயில் எடுப்புதி கனவே எள்ளார் அம்ம துணைப்பிரிந் தோரே. |
5 |
- கோப்பெருஞ் சோழன். |
கனவே! வேனிற்காலத்தில் மலரும் பாதிரியினது வளைந்த மலரினது துய்யைப் போன்ற மயிர் எழுந்து படர்ந்த அழகு ஒழுகும் மாமையையும் நுண்ணிய தொழிலையுடைய ஆபரணத்தையும் உடைய தலைவியை கொணர்ந்து கொடுத்தாயைப் போல இனிய துயிலினின்றும் எழுப்பு கின்றாய் தம் துணைவியரைப் பிரிந்தோர் நின்னை இகழார்.
முடிபு: கனவே, இன்றுயில் எடுப்புதி; துணைப் பிரிந்தோர் எள்ளார்.
கருத்து: தலைவியைக் கொணர்ந்து காட்டிய கனவிற்கு யாது கைம்மாறு செய்வேன்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 147. பாலை - தலைவன் கூற்று, தலைவன், இலக்கியங்கள், கனவே, கூற்று, குறுந்தொகை, பாலை, எள்ளார், கொணர்ந்து, பிரிந்தோர், இன்றுயில், எட்டுத்தொகை, சங்க, எடுப்புதி