குறுந்தொகை - 145. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவன் வரைபொருட்குப் பிரிந்து நீட்டிப்ப அதனால் துன்பமுற்ற தலைவி தோழியை நோக்கி, “என்துன்பத்தை அறியாமல் துயிலுகின்ற மாக்களை யுடைமையால் இச்சிறுகுடி எனக்கு உறைபதி யன்று” எனக் கூறித் தன் ஆற்றாமையைப் புலப்படுத்தியது.)
உறைபதி யன்றித் துறைகெழு சிறுகுடி கானலஞ் சேர்ப்பன் கொடுமை ஏற்றி ஆனாத் துயரமொடு வருந்திப் பானாள் துஞ்சா துறைநரொ டுசாவாத் துயிற்கண் மாக்களொடு நெட்டிரா வுடைத்தே. |
5 |
- கொல்லனழிசியார். |
கடற்றுறை பொருந்திய இந்தச் சிற்றூர் கடற்கரைச் சோலையையுடைய சேர்ப்பனது கொடுமையை நினைந்து மிகுகின்ற துன்பத்தோடு துயரமுற்று நடுயாமத்தில் துயிலாமல் தங்குவாரை ஏனென்று வினாவாத துயிலுதல் பொருந்திய கண்களையுடைய அறிவற்ற மக்களோடு நெடிய இரவை உடையது ஆதலின் இது நாம் தங்கியிருத்தற்குரிய ஊர் அன்று.
முடிபு: இச்சிறுகுடி துயிற்கண் மாக்களொடு நெட்டிராவுடைத்து; உறைபதியன்று.
கருத்து: தலைவர் இல்லாமையால் இவ்வூர் நமக்கு இனி உறையும்பதி அன்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 145. நெய்தல் - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, நெய்தல், மாக்களொடு, பொருந்திய, அன்று, துயிற்கண், இச்சிறுகுடி, எட்டுத்தொகை, சங்க, உறைபதி