கலித்தொகை - கலித்தொகை - மருதக் கலி 98
யாரை நீ எம் இல் புகுதர்வாய்? ஓரும் புதுவ மலர் தேரும் வண்டே போல் யாழ வதுவை விழவு அணி வைகலும் காட்டினையாய் மாட்டு மாட்டு ஓடி, மகளிர்த் தரத்தர, பூட்டு மான் திண் தேர் புடைத்த மறுகு எல்லாம் | 5 |
பாட்டு ஆதல் சான்ற நின் மாயப் பரத்தைமை காட்டிய வந்தமை கைப்படுத்தேன் பண்டு எலாம் கேட்டும் அறிவேன்மன், யான்; தெரி கோதை அம் நல்லாய்! தேறீயல் வேண்டும் பொரு கரை வாய் சூழ்ந்த பூ மலி வையை | 10 |
வரு புனல் ஆடத் தவிர்ந்தேன்; பெரிது என்னைச் செய்யா மொழிவது எவன்; ஓஒ! புனல் ஆடினாய் எனவும் கேட்டேன்; புனல் ஆங்கே நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக, மாண் எழில் உண் கண் பிறழும் கயல் ஆக, | 15 |
கார் மலர் வேய்ந்த கமழ் பூம் பரப்பு ஆகம், நாணுச் சிறை அழித்து நன்பகல் வந்த அவ் யாணர்ப் புதுப் புனல் ஆடினாய், முன் மாலை, பாணன் புணையாகப் புக்கு; ஆனாது அளித்து அமர் காதலோடு அப் புனல் ஆடி, | 20 |
வெளிப்படு கவ்வையை யான் அறிதல் அஞ்சி, குளித்து ஒழுகினாய் எனவும் கேட்டேன்; குளித்தாங்கே போர்த்த சினத்தால் புருவத் திரை இடா, ஆர்க்கும் ஞெகிழத்தான் நல் நீர் நடை தட்பச் சீர்த் தக வந்த புதுப் புனல் நின்னைக் கொண்டு, | 25 |
ஈர்த்து உய்ப்பக் கண்டார் உளர்; ஈர்த்தது உரை சால் சிறப்பின் நின் நீர் உள்ளம் வாங்க, புரை தீர் புதுப் புனல் வெள்ளத்தின் இன்னும் கரை கண்டதூஉம் இலை; நிரைதொடீஇ! பொய்யா வாட் தானை, புனை கழற் கால், தென்னவன் | 30 |
வையைப் புதுப் புனல் ஆடத் தவிர்ந்ததைத் தெய்வத்தின் தேற்றித் தெளிப்பேன்; பெரிது என்னைச் செய்யா மொழிவது எவன்; மெய்யதை, மல்கு மலர் வேய்ந்த மாயப் புதுப் புனல் பல் காலும் ஆடிய செல்வுழி, ஒல்கிக் | 35 |
களைஞரும் இல் வழி, கால் ஆழ்ந்து தேரோடு இள மணலுள் படல் ஓம்பு முளை நேர் முறுவலார்க்கு ஓர் நகை செய்து. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - மருதக் கலி 98, புனல், புதுப், இலக்கியங்கள், கலித்தொகை, நீர், மலர், கலித்தொகை, மருதக், எனவும், ஆடினாய், எவன், வந்த, கால், மொழிவது, வேய்ந்த, கேட்டேன், ஆடத், மாட்டு, சங்க, எட்டுத்தொகை, நின், மாயப், என்னைச், பெரிது, யான், செய்யா