கலித்தொகை - கலித்தொகை - மருதக் கலி 90
கண்டேன், நின் மாயம் களவு ஆதல்; பொய்ந் நகா, மண்டாத சொல்லித் தொடாஅல்; தொடீஇய நின் பெண்டிர் உளர்மன்னோ, ஈங்கு; ஒண்தொடி! நீ கண்டது எவனோ தவறு? கண்டது நோயும் வடுவும் கரந்து, மகிழ் செருக்கி, | 5 |
பாடு பெயல் நின்ற பானாள் இரவில் தொடி பொலி தோளும், முலையும், கதுப்பும், வடிவு ஆர் குழையும், இறையும், பொறையா ஒடிவது போலும் நுசுப்போடு, அடி தளரா, ஆராக் கவவின் ஒருத்தி வந்து அல்கல் தன் | 10 |
சீர் ஆர் ஞெகிழம் சிலம்ப, சிவந்து, நின் போர் ஆர் கதவம் மிதித்தது அமையுமோ? ஆயிழை ஆர்க்கும் ஒலி கேளா, அவ் எதிர் தாழாது எழுந்து நீ சென்றது அமையுமோ? மாறாள் சினைஇ, அவள் ஆங்கே, நின் மார்பில் | 15 |
நாறு இணர்ப் பைந் தார் பரிந்தது அமையுமோ? 'தேறு நீ; தீயேன் அலேன்' என்று மற்று அவள் சீறடி தோயா இறுத்தது அமையுமோ? கூறு இனி; காயேமோ, யாம்; தேறின், பிறவும் தவறு இலேன் யான்; | 20 |
அல்கல் கனவுகொல் நீ கண்டது; 'கனை பெயல் தண் துளி வீசும் பொழுதில் குறி வந்தாள் கண்ட கனவு' என, 'காணாது, மாறு உற்று பண்டைய அல்ல, நின் பொய்ச் சூள், நினக்கு; எல்லா! நின்றாய்; நின் புக்கில் பல' | 25 |
மென் தோளாய்! நல்கு, நின் நல் எழில்; உண்கு ஏடா! குறை உற்று நீ எம் உரையல்! நின் தீமை பொறை ஆற்றேம் என்றல் பெறுகுமோ, யாழ நிறை ஆற்றா நெஞ்சு உடையேம். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - மருதக் கலி 90, நின், இலக்கியங்கள், அமையுமோ, கலித்தொகை, மருதக், கண்டது, கலித்தொகை, அவள், உற்று, அல்கல், பெயல், எட்டுத்தொகை, தவறு, சங்க