கலித்தொகை - கலித்தொகை - பாலைக் கலி - 33
'வீறு சால் ஞாலத்து வியல் அணி காணிய யாறு கண் விழித்த போல், கயம் நந்திக் கவின் பெற, மணி புரை வயங்கலுள் துப்பு எறிந்தவை போல, பிணி விடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உக, துணி கய நிழல் நோக்கித் துதைபு உடன் வண்டு ஆர்ப்ப, | 5 |
மணி போல அரும்பு ஊழ்த்து மரம் எல்லாம் மலர் வேய, காதலர்ப் புணர்ந்தவர் கவவுக் கை நெகிழாது, தாது அவிழ் வேனிலோ வந்தன்று; வாரார், நம் போது எழில் உண்கண் புலம்ப நீத்தவர்! எரி உரு உறழ இலவம் மலர, | 10 |
பொரி உரு உறழப் புன்கு பூ உதிர, புது மலர்க் கோங்கம் பொன் எனத் தாது ஊழ்ப்ப, தமியார்ப் புறத்து எறிந்து எள்ளி, முனிய வந்து, ஆர்ப்பது போலும் பொழுது; என் அணி நலம் போர்ப்பது போலும் பசப்பு | 15 |
நொந்து நகுவன போல் நந்தின, கொம்பு; நைந்து உள்ளி உகுவது போலும், என் நெஞ்சு; எள்ளி, தொகுபு உடன் ஆடுவ போலும், மயில்; கையில் உகுவன போலும், வளை; என் கண் போல் இகுபு அறல் வாரும் பருவத்தும் வாரார்; | 20 |
மிகுவது போலும், இந் நோய்; நரம்பின் தீம் குரல் நிறுக்கும் குழல் போல் இரங்கு இசை மிஞிறொடு தும்பி தாது ஊத தூது அவர் விடுதரார் துறப்பார்கொல் நோதக, இருங் குயில் ஆலும் அரோ;' | 25 |
என ஆங்கு, புரிந்து நீ எள்ளும் குயிலையும், அவரையும், புலவாதி நீல் இதழ் உண்கணாய்! நெறி கூந்தல் பிணி விட, நாள் வரை நிறுத்துத் தாம் சொல்லிய பொய் அன்றி, மாலை தாழ் வியன் மார்பர் துனைதந்தார் | 30 |
கால் உறழ் கடுந் திண் தேர் கடவினர் விரைந்தே |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - பாலைக் கலி - 33, போலும், இலக்கியங்கள், போல், கலித்தொகை, தாது, கலித்தொகை, பாலைக், வாரார், எள்ளி, இதழ், சங்க, பிணி, எட்டுத்தொகை, உடன்