கலித்தொகை - கலித்தொகை - பாலைக் கலி - 21
'பால் மருள் மருப்பின், உரல் புரை பாவு அடி, ஈர் நறுங் கமழ் கடாஅத்து, இனம் பிரி ஒருத்தல் ஆறு கடி கொள்ளும் வேறு புலம் படர்ந்து, பொருள்வயிற் பிரிதல் வேண்டும்' என்னும் அருள் இல் சொல்லும், நீ சொல்லினையே; | 5 |
நன்னர் நறு நுதல் நயந்தனை நீவி, நின்னின் பிரியலன், அஞ்சல் ஓம்பு' என்னும் நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே அவற்றுள் யாவோ வாயின? மாஅல் மகனே! 'கிழவர் இன்னோர்' என்னாது, பொருள்தான், | 10 |
பழ வினை மருங்கின் பெயர்பு பெயர்பு உறையும்; அன்ன பொருள்வயிற் பிரிவோய் நின் இன்று இமைப்புவரை வாழாள் மடவோள் அமைக் கவின் கொண்ட தோள் இணை மறந்தே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - பாலைக் கலி - 21 , இலக்கியங்கள், கலித்தொகை, கலித்தொகை, பாலைக், நன்னர், பெயர்பு, என்னும், சங்க, எட்டுத்தொகை, பொருள்வயிற்