கலித்தொகை - கலித்தொகை - பாலைக் கலி - 15
அரி மான் இடித்தன்ன, அம் சிலை வல் வில் புரி நாண், புடையின், புறம் காண்டல் அல்லால் இணைப் படைத் தானை அரசோடு உறினும் கணைத் தொடை நாணும் கடுந் துடி ஆர்ப்பின், எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை | 5 |
மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி, உருத்த கடுஞ் சினத்து, ஓடா மறவர், பொருள் கொண்டு புண் செயின் அல்லதை, அன்போடு அருள் புறம் மாறிய ஆர் இடை அத்தம் புரிபு நீ புறம் மாறி, போக்கு எண்ணி, புதிது ஈண்டிப் | 10 |
பெருகிய செல்வத்தான் பெயர்த்தரல் ஒல்வதோ செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம்; அந் நலம் பயலையால் உணப்பட்டுப் பண்டை நீர் ஒழிந்தக்கால்; பொய் அற்ற கேள்வியால், புரையோரைப் படர்ந்து, நீ மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ | 15 |
தீம் கதிர் மதி ஏய்க்கும் திருமுகம்; அம் முகம், பாம்பு சேர் மதி போல, பசப்பு ஊர்ந்து தொலைந்தக்கால்; பின்னிய தொடர் நீவி, பிறர் நாட்டுப் படர்ந்து, நீ மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ புரி அவிழ் நறு நீலம் புரை உண் கண் கலுழ்பு ஆனா, | 20 |
திரி உமிழ் நெய்யே போல், தெண் பனி உறைக்குங்கால்; என ஆங்கு, அனையவை போற்றி, நினைஇயன நாடிக் காண்; வளமையோ வைகலும் செயலாகும்; மற்று இவள் முளை நிரை முறுவலார் ஆயத்துள் எடுத்து ஆய்ந்த | 25 |
இளமையும் தருவதோ, இறந்த பின்னே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - பாலைக் கலி - 15, இலக்கியங்கள், புறம், கலித்தொகை, பாலைக், கலித்தொகை, அற்ற, படர்ந்து, மறுத்தரல், நலம், புரி, எட்டுத்தொகை, சங்க, ஒல்வதோ, ஏய்க்கும்