கலித்தொகை - கலித்தொகை - நெய்தற் கலி 146
உரை செல உயர்ந்து ஓங்கி, சேர்ந்தாரை ஒரு நிலையே வரை நில்லா விழுமம் உறீஇ, நடுக்கு உரைத்து, தெறல் மாலை அரைசினும் அன்பு இன்றாம், காமம்; புரை தீர, அன்ன மென் சேக்கையுள் ஆராது, அளித்தவன் துன்னி அகல, துறந்த அணியளாய், | 5 |
நாணும் நிறையும் உணர்கல்லாள், தோள் ஞெகிழ்பு, பேர் அமர் உண்கண் நிறை மல்க, அந் நீர் தன், கூர் எயிறு ஆடி, குவிமுலைமேல் வார்தர, தேர் வழி நின்று தெருமரும்; ஆயிழை கூறுப கேளாமோ, சென்று; | 10 |
'எல்லிழாய்! எற்றி வரைந்தானை, நாணும் மறந்தாள்' என்று, உற்றனிர் போல, வினவுதிர்! மற்று இது கேட்டீமின், எல்லீரும் வந்து; வறம் தெற மாற்றிய வானமும் போலும்; நிறைந்து என்னை மாய்ப்பது ஓர் வெள்ளமும் போலும் | 15 |
சிறந்தவன் தூ அற நீப்ப, பிறங்கி வந்து, என்மேல் நிலைஇய நோய்; 'நக்கு நலனும் இழந்தாள், இவள்' என்னும் தக்கவிர் போலும்! இழந்திலேன்மன்னோ மிக்க என் நாணும், நலனும், என் உள்ளமும், | 20 |
அக் கால் அவனுழை ஆங்கே ஒழிந்தன! உக் காண் இஃதோ உடம்பு உயிர்க்கு ஊற்றாக, செக்கர் அம் புள்ளித் திகிரி அலவனொடு, யான் நக்கது, பல் மாண் நினைந்து கரை காணா நோயுள் அழுந்தாதவனைப் | 25 |
புரை தவக் கூறி, கொடுமை நுவல்வீர்! வரைபவன் என்னின் அகலான் அவனை, திரை தரும் முந்நீர் வளாஅகம் எல்லாம், நிரை கதிர் ஞாயிற்றை, நாடு என்றேன்; யானும் உரை கேட்புழி எல்லாம் செல்வேன்; புரை தீர்ந்தான் | 30 |
யாண்டு ஒளிப்பான்கொல்லோ மற்று; மருள் கூர் பிணை போல் மயங்க, வெந் நோய் செய்யும் மாலையும் வந்து, மயங்கி, எரி நுதி யாமம் தலை வந்தன்றுஆயின், அதற்கு என் நோய் பாடுவேன், பல்லாருள் சென்று; | 35 |
யான் உற்ற எவ்வம் உரைப்பின், பலர்த் துயிற்றும் யாமம்! நீ துஞ்சலைமன்; எதிர்கொள்ளும் ஞாலம், துயில் ஆராது ஆங்கண் முதிர்பு என்மேல் முற்றிய வெந் நோய் உரைப்பின், கதிர்கண் மழுங்கி, மதியும் அதிர்வது போல் | 40 |
ஓடிச் சுழல்வதுமன்; பேர் ஊர் மறுகில் பெருந் துயிற் சான்றீரே! நீரைச் செறுத்து, நிறைவுற ஓம்புமின் கார் தலைக்கொண்டு பொழியினும், தீர்வது போலாது, என் மெய்க் கனலும் நோய்; | 45 |
இருப்பினும் நெஞ்சம் கனலும்; செலினே, வருத்துறும் யாக்கை; வருந்துதல் ஆற்றேன்; அருப்பம் உடைத்து, என்னுள் எவ்வம் பொருத்தி, பொறி செய் புனை பாவை போல, வறிது உயங்கிச் செல்வேன், விழுமம் உழந்து; | 50 |
என ஆங்குப் பாட, அருள் உற்று; வறம் கூர் வானத்து வள் உறைக்கு அலமரும் புள்ளிற்கு அது பொழிந்தாஅங்கு, மற்றுத் தன் நல் எழில் மார்பன் முயங்கலின், அல்லல் தீர்ந்தன்று, ஆயிழை பண்பே. | 55 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - நெய்தற் கலி 146, நோய், இலக்கியங்கள், நெய்தற், நாணும், கலித்தொகை, கூர், புரை, வந்து, கலித்தொகை, நலனும், எல்லாம், யான், யாமம், கனலும், உரைப்பின், எவ்வம், வெந், செல்வேன், மற்று, ஆராது, விழுமம், சங்க, எட்டுத்தொகை, பேர், ஆயிழை, போலும், வறம், சென்று, என்மேல்