கலித்தொகை - கலித்தொகை - நெய்தற் கலி 139
சான்றவிர், வாழியோ! சான்றவிர்! என்றும் பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி, அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால், இவ் இருந்த சான்றீர்! உமக்கு ஒன்று அறிவுறுப்பேன்: மான்ற துளி இடை மின்னுப் போல் தோன்றி, ஒருத்தி, | 5 |
ஒளியோடு உரு என்னைக் காட்டி, அளியள், என் நெஞ்சு ஆறு கொண்டாள்; அதற்கொண்டும் துஞ்சேன், அணி அலங்கு ஆவிரைப் பூவோடு எருக்கின் பிணையல் அம் கண்ணி மிலைந்து, மணி ஆர்ப்ப, ஓங்கு இரும் பெண்ணை மடல் ஊர்ந்து, என் எவ்வ நோய் | 10 |
தாங்குதல் தேற்றா இடும்பைக்கு உயிர்ப்பாக வீங்கு இழை மாதர் திறத்து ஒன்று, நீங்காது, பாடுவேன், பாய் மா நிறுத்து; யாமத்தும் எல்லையும் எவ்வத் திரை அலைப்ப, 'மா மேலேன்' என்று, மடல் புணையா நீந்துவேன் | 15 |
தே மொழி மாதர் உறாஅது உறீஇய காமக் கடல் அகப்பட்டு; உய்யா அரு நோய்க்கு உயவாகும் மையல் உறீஇயாள் ஈத்த இம் மா; காணுநர் எள்ளக் கலங்கி, தலை வந்து, என் | 20 |
ஆண் எழில் முற்றி உடைத்து உள் அழித்தரும் 'மாண் இழை மாதராள் ஏஎர்' என, காமனது ஆணையால் வந்த படை; காமக் கடும் பகையின் தோன்றினேற்கு ஏமம் எழிநுதல் ஈத்த இம் மா; | 25 |
அகை எரி ஆனாது, என் ஆர் உயிர் எஞ்சும் வகையினால், உள்ளம் சுடுதரும் மன்னோ முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மாதர் தகையால் தலைக்கொண்ட நெஞ்சு! அழல் மன்ற, காம அரு நோய்; நிழல் மன்ற, | 30 |
நேரிழை ஈத்த இம் மா; ஆங்கு அதை, அறிந்தனிர் ஆயின், சான்றவிர்! தான் தவம் ஒரீஇ, துறக்கத்தின் வழீஇ, ஆன்றோர் உள் இடப்பட்ட அரசனைப் பெயர்த்து, அவர் | 35 |
உயர்நிலை உலகம் உறீஇயாங்கு, என் துயர் நிலை தீர்த்தல் நும்தலைக் கடனே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - நெய்தற் கலி 139, இலக்கியங்கள், சான்றவிர், மாதர், கலித்தொகை, ஈத்த, நெய்தற், கலித்தொகை, மன்ற, காமக், மடல், நோய், எட்டுத்தொகை, சங்க, போல், ஒன்று, நெஞ்சு