கலித்தொகை - கலித்தொகை - நெய்தற் கலி 128
'தோள் துறந்து, அருளாதவர் போல் நின்று, வாடை தூக்க, வணங்கிய தாழை ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை, நளி இருங் கங்குல், நம் துயர் அறியாது, அளி இன்று, பிணி இன்று, விளியாது, நரலும் | 5 |
கானல் அம் சேர்ப்பனைக் கண்டாய் போல, புதுவது கவினினை' என்றியாயின், நனவின் வாரா நயனி லாளனைக் கனவில் கண்டு, யான் செய்தது கேள், இனி: 'அலந்தாங்கு அமையலென்' என்றானைப் பற்றி, 'என் | 10 |
நலம் தாராயோ?' என, தொடுப்பேன் போலவும், கலந்து ஆங்கே என் கவின் பெற முயங்கி, 'புலம்பல் ஓம்பு' என, அளிப்பான் போலவும்; 'முலையிடைத் துயிலும் மறந்தீத்தோய்' என, நிலை அழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும், | 15 |
'வலை உறு மயிலின் வருந்தினை, பெரிது' என, தலையுற முன் அடிப் பணிவான் போலவும்; கோதை கோலா, இறைஞ்சி நின்ற ஊதைஅம் சேர்ப்பனை, அலைப்பேன் போலவும், 'யாது என் பிழைப்பு?' என நடுங்கி, ஆங்கே, | 20 |
'பேதையைப் பெரிது' எனத் தெளிப்பான் போலவும்; ஆங்கு கனவினால் கண்டேன் தோழி! 'காண் தகக் கனவின் வந்த கானல் அம் சேர்ப்பன் நனவின் வருதலும் உண்டு' என | 25 |
அனை வரை நின்றது, என் அரும் பெறல் உயிரே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - நெய்தற் கலி 128, போலவும், இலக்கியங்கள், கலித்தொகை, நெய்தற், கலித்தொகை, ஆங்கே, பெரிது&, நனவின், இன்று, எட்டுத்தொகை, சங்க, கானல்