அகநானூறு - 99. பாலை
வாள் வரி வயமான் கோள் உகிர் அன்ன செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின் சிதரல் செம்மல் தாஅய், மதர் எழில் மாண் இழை மகளிர் பூணுடை முலையின் முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை |
5 |
அதிரல் பரந்த அம் தண் பாதிரி உதிர்வீ அம் சினை தாஅய், எதிர் வீ மராஅ மலரொடு விராஅய், பராஅம் அணங்குடை நகரின் மணந்த பூவின் நன்றே, கானம்; நயவரும் அம்ம; |
10 |
கண்டிசின் வாழியோ குறுமகள்! நுந்தை அடு களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின், பிடி மிடை, களிற்றின் தோன்றும் குறு நெடுந் துணைய குன்றமும் உடைத்தே! |
உடன்போகிய தலைமகளைத் தலைமகன் மருட்டிச் சொல்லியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 99. பாலை , பாலை, இலக்கியங்கள், அகநானூறு, தாஅய், அவிழ்ந்த, சங்க, எட்டுத்தொகை, முகை