அகநானூறு - 97. பாலை
'கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை |
5 |
கொலை வில் ஆடவர் போல, பலவுடன் பெருந் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும் அருஞ் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும், இருங் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த நுணங்கு கண் சிறு கோல் வணங்குஇறை மகளிரொடு |
10 |
அகவுநர்ப் புரந்த அன்பின், கழல் தொடி, நறவு மகிழ் இருக்கை, நன்னன் வேண்மான் வயலை வேலி வியலூர் அன்ன, நின் அலர்முலை ஆகம் புலம்ப, பல நினைந்து, ஆழல்' என்றி தோழி! யாழ என் |
15 |
கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து, அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில் அறல் அவிர் வார் மணல் அகல்யாற்று அடைகரை, துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி, கலிழ் தளிர் அணிந்த இருஞ் சினை மாஅத்து |
20 |
இணர் ததை புதுப் பூ நிரைத்த பொங்கர், புகை புரை அம் மஞ்சு ஊர, நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே? |
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 97. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, இருங், எட்டுத்தொகை, சங்க