அகநானூறு - 88. குறிஞ்சி
முதைச் சுவற் கலித்த மூரிச் செந்தினை ஓங்கு வணர்ப் பெருங் குரல் உணீஇய, பாங்கர்ப் பகுவாய்ப் பல்லிப் பாடு ஓர்த்து, குறுகும் புருவைப் பன்றி வரு திறம் நோக்கி, கடுங் கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய |
5 |
நெடுஞ் சுடர் விளக்கம் நோக்கி, வந்து, நம் நடுங்கு துயர் களைந்த நன்னராளன் சென்றனன்கொல்லோ தானே குன்றத்து இரும் புலி தொலைத்த பெருங் கை யானைக் கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம் |
10 |
இருஞ் சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ் செத்து, இருங் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும் காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றி, கொடு விரல் உளியம் கெண்டும் வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே? |
15 |
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.- ஈழத்துப் பூதன் தேவனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 88. குறிஞ்சி , இலக்கியங்கள், அகநானூறு, குறிஞ்சி, நோக்கி, பெருங், சங்க, எட்டுத்தொகை