அகநானூறு - 87. பாலை
தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம், கன்று வாய் சுவைப்ப, முன்றில் தூங்கும் படலைப் பந்தர்ப் புல் வேய் குரம்பை, நல்கூர் சீறூர் எல்லித் தங்கி, குடுமி நெற்றி நெடு மரச் சேவல் |
5 |
தலைக் குரல் விடியற் போகி, முனாஅது, கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின் எழுந்த தண்ணுமை இடங் கட் பாணி, அருஞ் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென, குன்று சேர் கவலை, இசைக்கும் அத்தம், |
10 |
நனி நீடு உழந்தனைமன்னே! அதனால் |
15 |
நீள் அமை வனப்பின் தோளுமார் அணைந்தே. |
வினை முற்றி மீளும் தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- மதுரைப் பேராலவாயார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 87. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க