அகநானூறு - 79. பாலை
தோட் பதன் அமைத்த கருங் கை ஆடவர் கனை பொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து, கல்லுறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில், பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய வன் புலம் துமியப் போகி, கொங்கர் |
5 |
படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும் சேதா எடுத்த செந் நிலக் குரூஉத் துகள் அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும் நனந்தலை அழுவம், நம்மொடு துணைப்ப, 'வல்லாங்கு வருதும்' என்னாது, அல்குவர |
10 |
வருந்தினை வாழி, என் நெஞ்சே! இருஞ் சிறை வளை வாய்ப் பருந்தின் வான் கட் பேடை, ஆடுதொறு கனையும் அவ் வாய்க் கடுந் துடிக் கொடு வில் எயினர் கோட் சுரம் படர, நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை, |
15 |
கல் பிறங்கு அத்தம் போகி, நில்லாப் பொருட் பிணிப் பிரிந்த நீயே. |
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 79. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, பிரிந்த, போகி, சங்க, எட்டுத்தொகை