அகநானூறு - 77. பாலை
'நல் நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர், |
5 |
குடி பதிப்பெயர்ந்த சுட்டுடை முது பாழ், கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார், பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின், உயிர் திறம் பெயர, நல் அமர்க் கடந்த தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர, |
10 |
செஞ் செவி எருவை, அஞ்சுவர இகுக்கும் கல் அதர்க் கவலை போகின், சீறூர்ப் புல் அரை இத்திப் புகர் படு நீழல் எல் வளி அலைக்கும், இருள் கூர் மாலை, வானவன் மறவன், வணங்குவில் தடக் கை, |
15 |
ஆனா நறவின் வண் மகிழ், பிட்டன் பொருந்தா மன்னர் அருஞ் சமத்து உயர்த்த திருந்துஇலை எஃகம் போல, அருந் துயர் தரும், இவள் பனி வார் கண்ணே. |
தலைமகன் பிரியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்குவித்தது.- மருதன் இள நாகனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 77. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க