அகநானூறு - 64. முல்லை
களையும் இடனால் பாக! உளை அணி உலகு கடப்பன்ன புள் இயற் கலி மா வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய, தளவுப் பிணி அவிழ்ந்த தண் பதப் பெரு வழி, ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ் |
5 |
வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக, செலவு நாம் அயர்ந்தனம்ஆயின், பெயல கடு நீர் வரித்த செந் நிலமருங்கின், விடு நெறி ஈர் மணல், வாரணம் சிதர, பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி, |
10 |
மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ, ஊர்வயின் பெயரும் பொழுதில், சேர்பு உடன், கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும் ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை |
15 |
புலம்பு கொள் மாலை கேட்டொறும் கலங்கினள் உறைவோள் கையறு நிலையே. |
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 64. முல்லை , இலக்கியங்கள், முல்லை, அகநானூறு, உடன், எட்டுத்தொகை, சங்க