அகநானூறு - 62. குறிஞ்சி
அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய், ஆகத்து அரும்பிய முலையள், பணைத் தோள், மாத் தாட் குவளை மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண், மாஅயோளொடு |
5 |
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்ப, கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின், கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று நெடுஞ் சுழி நீத்தம் மண்ணுநள் போல, |
10 |
நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல் ஆகம் அடைதந்தோளே வென் வேற் களிறு கெழு தானைப் பொறையன் கொல்லி ஒளிறு நீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக் கடவுள் எழுதிய பாவையின், |
15 |
மடவது மாண்ட மாஅயோளே. |
அல்லகுறிப்பட்டுழி, தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 62. குறிஞ்சி , இலக்கியங்கள், குறிஞ்சி, அகநானூறு, கெழு, எட்டுத்தொகை, சங்க